Search The Blog

இதிகாசம்

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும். இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். (‘இது இப்படி நடந்தது’ எனவும் வேறு சிலர் ‘இப்படி நடந்தது என்ன ஆச்சரியம்’ எனவும் பொருள் கொள்வர்.)

இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதிகாசங்கள் ஒரு தோழனை போல மக்களை ஒரு சமய நெறிகள் நடத்துவதனால் “சம்ஹிதம்” எனப்படுகின்றன. இதிகாசம் என்ற தொகுதியில் சிவரகசியம் , மகாபாரதம், ராமாயணம் ஆகிய மூன்றும் அடங்கும். இவற்றில் சிவரகசியம் மேலானதாகையால் “பரமேதிகாசம்” எனப்படும். இது இன்று வழக்கில் இல்லை.

நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள்,அனைத்தும் வாய்மொழியாக ஒருகாலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக சில காலம் வரையிலும் இருந்து சமுதாய பரிணாம வளர்ச்சியை தனதாக்கிக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகள் கால ஓட்டத்தையும், அதன் சமூக நியதிகளை இதிலிருந்து எடுத்து மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும், தெளிவாகவும், எளிமையாகவும், சிக்கலான, நெருடலான, மனிதகுலச் சிந்தனைகளை உள்வாங்கி, உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.

இதிகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக