Search The Blog

வாழ்க்கை வரலாற்று நாடகங்கள்


ஒருவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்த நிலையில், அவை விடுபடாத வண்ணம் புனைந்துரை அதிகமின்றி உள்ள வண்ணம், எழுதுவது இத்தகு நாடகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் யாவும் இதில் இடம்பெறும்.

மு.வரதராசனாரின் பச்சையப்பர் நாடகம் இதற்குத் தக்க எடுத்துக் காட்டாகும். அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பதும் பல நிகழ்ச்சித் தொகுப்பாக அமைந்து இவ்வகை நாடகமாக அமைகின்றது.

எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத்தமிழ்க்கலா வித்துவரத்தினம், ஒளவை திரு டி. கே. ஷண்முகம் எம். எல். சி. அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடுமாறு அரியதோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள்.

வாழ்க்கை வரலாற்று நாடகங்கள் அல்லது சுயசரிதை நாடகம் ஒரு சுயசரிதை திரைப்படத்தில் வியத்தகு கூறுகளை உள்ளடக்கியது. இந்த படங்கள் வரலாற்று மற்றும் "உண்மையை அடிப்படையாகக் கொண்ட" படங்களில் இருந்து வேறுபடுகின்றன, ஏனெனில் அவை குறிப்பாக ஒரு நபர் அல்லது ஒரு குழுவின் வாழ்க்கையை விவரிக்கின்றன.

ஒரு சுயசரிதை நாடகமாக பரந்த அளவில் உள்ளது, உண்மையான வாழ்க்கையின் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளுக்கு இடமளிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக