Search The Blog

பகவத் கீதை

பகவத் கீதை (சமக்கிருதம் Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.

இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது

பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்தநூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்தியாயங்கள் கொண்டுள்ளது. முதல் பகுதியில் (1 முதல் 6 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுயமுயற்சி குறித்து விளக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில் (7 முதல் 12 வரை உள்ள அத்தியாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அனுக்கிரகம் குறித்து விளக்கப்படுகிறது. மூன்றாம் பகுதியில் (13 முதல் 18 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவ-ஈஸ்வர ஐக்கியம் (சீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்), ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது.

ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத் கீதை உரைகளாகும்.

கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.

          வேதாந்தப் பார்வை
          சுயதருமப் பார்வை
          கர்ம யோகப் பார்வை
          பக்தி யோகப் பார்வை
          ஞான யோகப் பார்வை

உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்

குருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.

பகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் மிகச் சிறப்பான அறிவாகும் என்பதையே அஃது உணர்த்துகிறது.

பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

குருச்சேத்திரப் போர் நடந்த காலம்

குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, புராண இலக்கியங்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். கடலில் மூழ்கிய துவாரகை நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், துவாரகை கி.மு 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

அர்ஜுனனின் தயக்கம்

குருக்ஷேத்திரப் போர் நடக்கும் சமயத்தில் கௌரவ- பாண்டவ சேனைகள் அணிவகுத்து நிற்கின்றன. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனின் ரதத்தை செலுத்துகிறார் பாண்டவர்களில் வல்லமை மிகுந்தவன் அர்ஜுனன். அவனிடம், ஸ்ரீராமனின் கோதண்டத்துக்குச் சமமான காண்டீபம் எனும் வில் இருந்தது. தவங்கள் பல புரிந்து பிரம்மாஸ்திரம், வருணாஸ்திரம் போன்ற எண்ணற்ற அஸ்திரங்களைப் பெற்றிருந்தான் அவர். தர்மத்தைக் காக்க தன் உயிரைக் கொடுக் கவும் தயாரானவன் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே தேரோட்டியாக அவர்டோன் இருந்தார். ஆனால், யுத்தம் ஆரம்பமாகும் முன், திடீரென கோழையைப் போன்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் அர்ஜுனன். வேரற்ற மரம் போல், ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து புலம்பினார்.

"இந்த யுத்தம் வேண்டாம்... உற்றார் உறவினர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். குல தர்மத்தை மீறி பெரியோர்களைக் கொல்வது பாபமாகிவிடும். இதனால் ஏற்படும் புகழும் பெயரும் எனக்குத் தேவையில்லை. இந்த இழிசெயலைச் செய்ய எனக்குப் பயமாக இருக்கிறது" என்று கிருஷ்ணரிடம் புலம்பபினார்.

இந்த சூழ்நிலையில் பகவானின் உபதேசத்தைப் பெற வேண்டிய அர்ஜுனன், அவருக்கே உபதேசம் செய்து கொண்டு இருந்தார். இதனால் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்று பெயர். இரண்டாம் அத்தியாம் "ஸாங்கிய யோகம்" ஆகும். இந்த பயத்தைப் போக்கவே, பகவான் ஆத்ம போதத்தை உபதேசித்தார்.

”உடல்கள் அழியலாம்; ஆத்மா அழியாது. அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மா இறவாதது, பிறவாதது, வளராதது, கொல்லப்படாதது, என்றும் குறையாதது. உடலானது, ஓர் ஆடையை மாற்றி மற்றொன்றை அணிவது போன்று, ஆத்மா தன் உடலை மாற்றிக்கொள்ளவல்லது." என்று ஸ்ரீ கிருஷ்ணன் தன உபதேசத்தை தொடங்கினார்.

(கீதை தொடரும் ...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக