Search The Blog

20ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்

இருபதாம் நூற்றாண்டு - முதற்பகுதி:

இருபதாம் நூற்றாண்டு ‘தமிழின் மறுமலர்ச்சிக் காலம்’ என்று போற்றப்படுகிறது. மேலைநாட்டவர் தொடர்பு, ஆங்கிலக் கல்வி என்பனவும் தொழிற்புரட்சி, அறிவியல் வளர்ச்சி என்பனவும் இந்திய மக்கள் மனத்திலும் தமிழக மக்கள் மனத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி புதிய பாதையில் செல்ல

    1. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (நாடகம்)
    2. உ.வே. சாமிநாத அய்யர் (பதிப்பு)
    3. பாரதியார் (கவிதை)
    4. புதுமைப்பித்தன் (சிறுகதை)
    5. பாண்டித்துரை தேவர் (தமிழ்ச்சங்கம்)
    6. திரு.வி.க (உரைநடை)
    7. மறைமலையடிகள் (தனித்தமிழ்)
    8. வையாபுரிப்பிள்ளை (ஆராய்ச்சி)

ஆகியோர் காரணமாய் அமைந்தனர். இவர்கள் காட்டிய வழியில் சுதந்திரத்துக்கு முன் தமிழக இலக்கிய வரலாறு எவ்வாறு வீறு பெற்றது என்பதை இந்தப் பாடம் விளக்கிச் சொல்கிறது.

இருபதாம் நூற்றாண்டு - இரண்டாம் பகுதி

இருபதாம் (20ம்) நூற்றாண்டு தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்று போற்றப் பெறுகிறது. இந்தியா விடுதலை அடைந்த பின்பு, நாட்டில் பல்வேறு துறைகளும் வீறுகொண்டு எழுந்தன. மொழியில் உள்ள எழுதப்படாத, எழுதப்பட்ட இலக்கியங்கள் புதிய பாதையில் நடைபயின்றன. ஏற்கெனவே உள்ள இலக்கியத் துறைகள் திறனாய்வு நோக்கில் அணுகப்பட, பிறமொழிப் பயிற்சியறிவால் தமிழில் மொழிபெயர்ப்பியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், கல்வெட்டியல், நடையியல், இதழியல், மொழியியல், கோயிற்கலை என்ற துறைகள் தோன்றின. அறிவியல் பெற்ற வளர்ச்சி காரணமாகத் தொலைக்காட்சித் தமிழ், கணினித் தமிழ், விளம்பரத் தமிழ், பதிப்புத் தமிழ், திரைத்தமிழ், மேடைத்தமிழ் எனத் தமிழும் வளர்ந்தது.


இருபதாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்


ஆசிரியர்கள் வருடம் நூல்கள்
பாம்பன் குமரகுாச அடிகள் (கி.பி.1851 - கி.பி.1929)
  • குமார சுவாமியம்
  • நாலாயிர பிரபந்த விசாரம்
ஆபிரகாம் பண்டிதர் (கி.பி.1859 - கி.பி.1930)
  • கருணாமிர்த சாகரம்
  • பாணர் கைவழி
சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (கி.பி.1862 - கி.பி.1915)
  • திருக்குறளாராய்ச்சி
  • தொல்காப்பியப் பாயிர விருத்தி
மாகறல் கார்த்திகேய முதலியார் (கி.பி.1857 - கி.பி.1916) தமிழ்மொழி நூல்
குமார சுவாமிப் புலவர் (கி.பி.1854 - கி.பி.1922) இலக்கிய சொல்லகராதி
வ.உ.சிதம்பரம் பிள்ளை (கி.பி.1872 - கி.பி.1936)
  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • மனம்போல் வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சுயசரிதை
மறைமலை அடிகள் (வேதாசலம்) (கி.பி.1876 - கி.பி.1950)
  • மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்)
  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
  • யோகநித்திரை (அ) அறிதுயில்
  • மனித வசியம் (அ) மனக்கவர்ச்சி
  • குமுதவல்லி
  • நாக நாட்டரசி
  • சோமசுந்தரக் கண்ணியாக்கம்
  • சாகுந்தலம் - (மொழியாக்கம்)
  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • முல்லைப் பாட்டு ஆராய்ச்சி
  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி
  • தொலைவில் உணர்தல்
  • மரணத்தின்பின் மனிதர் நிலை
  • சிந்தனைக் கட்டுரைகள்
  • இளைஞர்க்கான இன்றமிழ்
  • சிறுவர்க்கான செந்தமிழ்
  • உரைமணிக்கோவை
  • அறிவுரைக் கோவை
  • வேளாளர் நாகரிகம்
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
  • முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர்,
  • தமிழர் மதம்
  • சைவ சித்தாந்த ஞானபோதம்
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா
  • இந்தி பொது மொழியா?
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
  • திருவாசக விரிவுரை


தொடர்ச்சியை அடுத்த பக்கம் பார்க்கவும்

நகைச்சுவை நாடகங்கள்


மக்களைச் சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, உருவம், மொழிநடை, அறியாமை, அப்பாவித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப் பெறுவது இது. இதன் தலைப்பே இதனியல்பைப் புலப்படுத்துவதாக அமைவதுண்டு. கேலி, கிண்டல், தரக்குறைவு முதலியன இவற்றில் மிகுந்திருத்தல் இயல்பு.

சங்கீதப் பைத்தியம், வைகுண்ட வைத்தியர், சோம்பேறி, சபாபதி, சகுனம் பார்த்தது போன்றன இவ்வகை நாடகங்களாகும். பம்மல் சம்பந்த முதலியார் இவ்வகை நாடகங்களில் ஆற்றல் படைத்தவராவார்.

நகைச்சுவை நாடகம் (Comedy-drama) எனப்படுவது திரைப்படம், அரங்கு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவை வகையாகும். நகைச்சுவை நாடகம் பெரும்பாலும் தொலைக்காட்சியில் தான் தொடராக எடுக்கப்படுகின்றது. 1990களில் இயக்குனர் நாகா இயக்கத்தில் வெளியான ரமணி வெர்சஸ் இந்த வகைக்குள் அடங்கும்.

வாழ்க்கை வரலாற்று நாடகங்கள்


ஒருவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்த நிலையில், அவை விடுபடாத வண்ணம் புனைந்துரை அதிகமின்றி உள்ள வண்ணம், எழுதுவது இத்தகு நாடகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் யாவும் இதில் இடம்பெறும்.

மு.வரதராசனாரின் பச்சையப்பர் நாடகம் இதற்குத் தக்க எடுத்துக் காட்டாகும். அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பதும் பல நிகழ்ச்சித் தொகுப்பாக அமைந்து இவ்வகை நாடகமாக அமைகின்றது.

எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத்தமிழ்க்கலா வித்துவரத்தினம், ஒளவை திரு டி. கே. ஷண்முகம் எம். எல். சி. அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடுமாறு அரியதோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள்.

வாழ்க்கை வரலாற்று நாடகங்கள் அல்லது சுயசரிதை நாடகம் ஒரு சுயசரிதை திரைப்படத்தில் வியத்தகு கூறுகளை உள்ளடக்கியது. இந்த படங்கள் வரலாற்று மற்றும் "உண்மையை அடிப்படையாகக் கொண்ட" படங்களில் இருந்து வேறுபடுகின்றன, ஏனெனில் அவை குறிப்பாக ஒரு நபர் அல்லது ஒரு குழுவின் வாழ்க்கையை விவரிக்கின்றன.

ஒரு சுயசரிதை நாடகமாக பரந்த அளவில் உள்ளது, உண்மையான வாழ்க்கையின் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளுக்கு இடமளிக்கிறது

இலக்கிய வடிவ நாடகங்கள்


சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் காணப்பெறும் சிற்சில கதாபாத்திரங்களையும், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையும் மையப் பொருளாகக் கொண்டு புனையப்பெறுவன இவ்வகை நாடகங்கள் ஆகும். இவற்றில் தலைமைப் பாத்திரங்கள் செந்தமிழ் நடையிலும், சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத்தமிழ் நடையிலும் வசனம் பேசுதலாக அமைப்பது இயல்பு. இவற்றைக் கவிதையில் அமைப்பதும் உண்டு. உரைநடையில் அமைப்பதும் உண்டு. பாரதிதாசனின் பிசிராந்தையார், சேரதாண்டவம், வ.சுப.மாணிக்கனாரின் மனைவியின் உரிமை (வள்ளல் பேகன் வரலாறு), புலவர் பழநியின் அனிச்ச அடி (பெண் கொலை புரிந்த நன்னன் கதை), மறைமலையடிகளின் அம்பிகாபதி அமராவதி, அ.ச.ஞானசம்பந்தனாரின் தெள்ளாறெறிந்த நந்தி போன்றன இவ்வகை நாடகங்களுக்குத் தக்க சான்றுகளாகும்.

தமிழ் நாடக வரலாற்றைப் பொறுத்தவரை பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகள் குறிப்பிடத்தக்க காலக்கட்டங்களாகும். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் நாடக இலக்கியங்கள் எழுத்து வடிவில் கிடைத்துள்ளன. மேலும் சோழர் காலத்தில் அரசர்கள் ஆதரவில் அரண்மனைகளிலும், கோயில்களிலும் அடைந்து கிடந்த நாடகக் கலை, மக்கள் மன்றங்களைத் தேடிவரத் தொடங்கியது. தெலுங்கு மற்றும் மராட்டிய அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தக் காலக்கட்டத்தில்தான், நாட்டுப்புற நிகழ்த்து கலைகளான பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், குளுவ நாடகம், மகுட நாடகம், கீர்த்தனை போன்ற நாடக வகைகள் வளர்ச்சி பெற்றன. இவ்வகை நாடகங்கள் தொன்மைத் தமிழ் நாடகப் போக்கில் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இனிக் காணலாம்.

பள்ளு நாடகம்
அரசர்களைப் பாடிக் கொண்டிருந்த காலம் மாறி, மக்களைப் பற்றிப் பாடும் காலம் வந்தது. அதனால் பலவகைப்பட்ட புதிய இலக்கியங்கள் பிறந்தன. கி.பி.பதினாறாம் நூற்றாண்டளவில் அவ்வாறு பிறந்ததுதான் பள்ளு நாடகம். மேடை வடிவமும், இலக்கிய வடிவமும் கொண்ட நிலையில் எழுந்த முதல் நாடக வகை பள்ளு. மருத நில மக்கள், பள்ளு நாடக உறுப்பினர்களாக வருகின்றனர். சிலப்பதிகாரம் போன்ற பண்டைய நூல்களில் உழவர்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து நாடக இலக்கிய வடிவில் பிற்காலப் புலவர்கள் உருவாக்கினர்.

திருவாரூர்ப் பள்ளு என்னும் பள்ளு நூல்தான் இவ்வகையில் முதலில் தோன்றியதாகும். கதிரைமலைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, வைசியப் பள்ளு எனப் பல குறிப்பிடத்தக்க பள்ளு நாடகங்கள் பின் தோன்றின.

பள்ளு நாடகங்களில் மிகச் செல்வாக்குப் பெற்றது முக்கூடற்பள்ளு ஆகும். இது கி.பி.1680இல் எழுந்தது. இப்பள்ளு, பிற்காலத்தில் பல பள்ளு நூல்கள் தோன்றுவதற்கு மூலநூலாக அமைந்தது எனலாம்.

‘பள்ளு நூல்கள், நாடக இலக்கியங்களாக அமைந்தவை. இவற்றை அப்படியே நடிக்க முடியாது. இவற்றில் நாடகப் பாங்கு அமைந்திருப்பதால் சில உத்திகளைச் சேர்த்து இவற்றை நடிப்பதற்கேற்ற வகையில் நாடகமாக்கும் முயற்சி பிற்காலத்தில் தோன்றியது’ என்பார் ஆறு. அழகப்பன்.

கதிரை மலைப் பள்ளு, முக்கூடற்பள்ளு இரண்டும் நாடகமாக நடிக்கப் பட்டவை. கதிரைமலைப் பள்ளின் மூல இலக்கியத்தை இலங்கை அறிஞர் க.வீரகத்தி என்பவர் நாடக வடிவில் இசைநாடகமாக்கி வெளியிட்டுள்ளார். அது இலங்கையில் பல இடங்களில் நாடகமாக நடிக்கப்பட்டுள்ளது. முக்கூடற் பள்ளு என்னாயினாப் புலவர் என்பவரால் நடித்தற்கேற்ற நாடகமாக எழுதப்பட்டது. மேடை நாடகமாகவும் நடிக்கப்பட்டது.

பள்ளு நாடகம் எளிய மக்கள் நடிப்பதற்கும், பார்ப்பதற்கும் தக்கதாக இருந்தது. நாட்டுப்புறக் கோயில் விழாக்களில் பாமர மக்களால் அதிகப் பொருள் செலவோ, அதிகப் பயிற்சியோ இன்றி எளிதாக நடிப்பதற்குத் தக்கதாய்ப் பள்ளு நாடகங்கள் இருந்தன. பள்ளு நாடகம் பார்த்து மக்கள் சொல்லையும், நெல்லையும் வளர்த்தார்கள் என்பார் ஏ.என்.பெருமாள்.

குறவஞ்சி நாடகம்
குறிஞ்சி நிலமாகிய மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறவர்கள். குறப்பெண்ணைக் குறவஞ்சி என்பர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று குறிசொல்லும் வழக்கமுடையவர்கள். சங்க இலக்கியங்களிலே வெறியறிதல் என்ற பகுதியிலேயே இச்செய்திகளைக் காணலாம். இவ்வாறு குறி சொல்லும் செய்தியை மையக்கருவாகக் கொண்டு தோன்றியதே குறவஞ்சி நாடகம். இதனைக் குறத்திபாட்டு எனவும், குறம் எனவும் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறும்.

குறவஞ்சி நாடகத்தில், இன்றைய நாடகங்களுக்கு இருப்பது போல் களம், காட்சி என்னும் பிரிவுகள் இல்லை. எனினும் அதனை மூன்று காட்சிகளாக மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு என்னும் தம்முடைய நூலில் பிரித்துக் காட்டுவார். குறத்தி வரும்வரை அமைந்துள்ள தலைவியினுடைய வரலாறு முதற்காட்சியாகவும், குறத்தி குறி கூறிப் பரிசில் பெற்றுச் செல்லுதல் இரண்டாவது காட்சியாகவும், சிங்கனின் பறவை வேட்டை முதல் சிங்கன் - சிங்கி உரையாடல் வரை உள்ள பகுதிகள் மூன்றாவது காட்சியாகவும் அவர் பகுப்பில் விளங்குகின்றன.

பாட்டுடைத் தலைவர் உலா பற்றிய அறிவிப்புடன் தொடங்கிய நாடகம், பாட்டுடைத் தலைவர் வாழ்த்துடன் முடிவு பெறுவது நாடகத்திற்கு ஓர் இயைபினை ஏற்படுத்துவதாக உள்ளது. குறவஞ்சியில் வரும் உரையாடல்கள், பேச்சு வழக்குச் சொற்களாகவும், மரபுத் தொடர், பழமொழிகள், சேரி வழக்குகள் கொண்டதாகவும் அமைகின்றன.

குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை குறமே குறவஞ்சி இலக்கிய வகையில் முதலில் தோன்றியதாகும்.

கிரேக்க மொழி நாடகங்களில், வசனப் பகுதிகள் மெல்ல நுழைந்தது போலவே, குறவஞ்சி நாடகங்களிலும் ஒரு செயற்பாட்டிற்கும், மற்றொரு செயற்பாட்டிற்கும் இடையே இணைப்புப் போல் விளங்குகின்ற வசனப் பகுதிகள் இடம் பெறலாயின. கும்பேசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருமலையாண்டவர் குறவஞ்சி, ஓதாளர் குறவஞ்சி, சிதம்பரக் குறவஞ்சி முதலிய குறவஞ்சி நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

பள்ளு போன்றே அதன் பின் தோன்றிய குறவஞ்சி நாடகங்களும் மக்களைப் பாடின. குறவஞ்சி இலக்கியங்களில் பாட்டுகளை இணைக்கும் உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றன. இது இன்றைய நாடகத்தை நோக்கிய வளர்ச்சி எனலாம். பொதுவாகப் பள்ளு நாடகத்தைவிடக் குறவஞ்சி நாடகங்கள் அதிகமாக நடிக்கப்பட்டதோடு, வளர்ந்து வந்த போக்கினையும் காணமுடிகிறது.

நொண்டி நாடகம்
பள்ளு, குறவஞ்சி போலச் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வகையில் நொண்டி நாடகமும் ஒன்றாகும். இந்நாடகம் நொண்டிச் சிந்தால் பாடப்பட்டிருந்ததாலும், நொண்டி ஒருவன் தன் வரலாறு கூறுவதைப் போன்ற அமைப்பைப் பெற்றிருந்ததாலும் நொண்டி நாடகம் என்ற பெயர் வந்திருக்கலாம். ஒற்றைக்கால் நாடகம் என்று கிராமப்புற வழக்கில் இந்நாடகம் அழைக்கப்படுகிறது. இந்நாடக வகை 17ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும்.

ஒரு நடிகன் நொண்டியாக மக்கள் முன் தோன்றி, ஆடலும் பாடலும் மிகுந்த இவ்வகை நாடகங்களை நடித்துக் காட்டியிருக்கிறான். நகைச்சுவை மிகுந்த நாடகமாக நொண்டி நாடகம் விளங்குகிறது.

அக்காலச் சமுதாயத்தில் அதிகமாகக் காணப்பெற்ற பரத்தையர் உறவு, களவு போன்ற தீச்செயல்களை அரங்கத்தில் காட்டி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே நொண்டி நாடகத்தின் நோக்கமாகும். சிறப்பாக மக்களை மகிழ்வித்து, அறிவு புகட்ட வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

பல நொண்டி நாடகங்கள் அக்காலத்தில் அரங்கேறின. அவற்றில் சிறப்பானவை திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், திருமலை நொண்டி நாடகம், அவினாசி நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் முதலியனவாகும். நொண்டி நாடகத்தில் முதலில் தோன்றியதாகச் சீதக்காதி நொண்டி நாடகத்தைக் குறிப்பிடலாம்.

ஒருவனே தோன்றி மேடையின் மீது பாடித் தன் வரலாறு கூறுவதாக அமையும் இந்நாடகத்தை ஒரு தனி நடிப்பு நாடகமாகக் கொள்ளலாம். இது குறவஞ்சி நாடகத்திலிருந்து இன்னும் சிறிது உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை உணர்த்துகிறது.

விலாச நாடகம்
விலாச நாடகம் என்பது பலவகை இலக்கியங்களின் சாயலையும் பெற்று விளங்கும் ஒரு சிற்றிலக்கிய வகை நாடகமாகும். கோவை, தூது போன்ற சிற்றிலக்கியங்களின் தாக்கம் அதிகமாக விலாச நாடகத்தில் உள்ளது. பெரும்பாலான விலாசங்கள், நாடகப் போக்கிலேயே அமைந்துள்ளன.

மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ள விலாசங்களும் உண்டு. பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும் இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்த விலாசங்களும் உண்டு. தெருக்கூத்தைப் போன்றே அமைந்துள்ள நாடக விலாசங்களும் உண்டு.

தமிழ் நாடக வரலாறு என்ற தன் நூலில் சக்திபெருமாள் கூறும் போது, “இந்நூற்றாண்டில் (கி.பி.19) நூற்றுக்கணக்கான நாடகங்கள் இயற்றப்பட்டு அவை புற்றீசல்கள் போலக் குறுகிய கால அளவே வாழ்ந்து மறையலாயின. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது தலைவியின் புகழைச் சிறப்பித்துப் பேசும் நாடகம் விலாசம் எனப்பட்டது. அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம் என்பன அவ்வாறு பெயர் பெற்றவை” என்பார்.

சில விலாசங்களைப் படைத்த ஆசிரியர்களே தங்கள் நூல்களை நாடகங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பூம்பாவையார் விலாசம் என்ற நூல் இதற்குச் சான்றாகும்.

கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாவராததாள சிங்காராதி அபிநய தர்ப்பண விலாசம் என்னும் நூல், இசை, நாடகம் ஆகியவற்றை விளக்கும் நூலாகவே உள்ளது.

பூகோள விலாசம், அண்ட கோள விலாசம், அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம், ஆறாதார விலாசம், சந்திர விலாசம், சமுத்திர விலாசம் எனப் பல விலாச நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன.

1877இல் திண்டிவனம் இராமசாமி ராசு என்பார் பிரதாப சந்திர விலாசம் என்னும் சமூக நாடகத்தைக் கவிதை, உரைநடை கலந்து அங்கம், களப் பிரிவுகளுடன் எழுதினார். அது முதல் தமிழ் நாடக உலகில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது.

1857இல் காசி விசுவநாத முதலியார் என்பவரால் இயற்றப்பட்ட நாடகம் டம்பாச்சாரி விலாசம். இது 19 ஆம் நூற்றாண்டில் அரங்கேறிய நாடகங்களிலே தலை சிறந்த நாடகம் என்று குறிக்கப்படுகின்றது. நாடக அமைப்பால் மட்டுமன்றிச் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டும் இந்நாடகம் முதலிடம் பெறுகின்றது.

இலக்கிய வகை நாடகங்களில் ஆரம்ப காலத்தில் பாடல்கள் மட்டும் இருந்தன. குறவஞ்சியில் இடையிடையே உரையாடல் இடம் பெற்றது. நொண்டி நாடகத்தில் தனி நடிப்பு வெளிப்பட்டது. விலாச நாடகக் காலத்தில் இறுதிப் பகுதியில் தமிழின் முதல் சமூக நாடகமாக விலாசமே (டம்பாச்சாரி விலாசம்) அமைந்தது. இதன் மூலம் தொன்மை நாடகத்தின் போக்கு பெரும் மாறுதலடைந்து அடுத்த காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

கீர்த்தனை நாடகம்
கி.பி.18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் கீர்த்தனங்களாகிய இசைப் பாடல்களால் நாடகக் கூறுகள் மிக்க நாடகக் கீர்த்தனை இலக்கியங்கள் சில எழுதப்பட்டன. அவற்றின் கதைகள் பெரும்பாலும் இராமாயணம், பெரிய புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டதாகவே அமைந்தது.

நாடகக் கீர்த்தனை இலக்கியங்களுக்கு முன்னோடி சீர்காழி அருணாசலக் கவிராயர் 1771 இல் எழுதிய இராம நாடகக் கீர்த்தனை எனலாம். இந்நூலில் 16 இடங்களில் இந்நூலை நாடகம் என்றே ஆசிரியர் வழங்குகிறார். மேலும் ‘உனதாசையாலே நாடகமாகச் செய்தேன்’ என அபசார க்ஷமை என்ற பகுதியில் கூறுகிறார். நூற்பெருமை கூறும்போதும் ‘நாடகம் சொல்வேன்’ என்றும் கூறுகிறார். பாத்திரப் படைப்பு, கதைப் பின்னல், சுவை கூட்டல் ஆகியவை நாடகம் போன்று சிறப்பாக உள்ளன.

கோபால கிருஷ்ண பாரதியார் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படைத்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இதில் உரைநடைப் பகுதிகள் மிகுதி. இருசொல் அலங்காரம் என்னும் இருவர் மாறி மாறிப் பேசுவது என்ற முறையில் உரையாடலை அமைத்துள்ளார். அதனால் நாடக அமைப்புக்கு உகந்ததாக இக்கீர்த்தனை அமைகின்றது.

பொதுவாகக் கீர்த்தனை நாடகங்கள் தனி ஒருவராலேயே கதாகாலட்சேப முறையில் பாடி நடிக்கப் பெற்றன. இவை காலத்துக்கேற்ற முறையில் மாற்றங்களுடன் பாடப் பெற்றன.

சமூக நாடகங்களின் தொடக்கம்
டம்பாச்சாரி விலாசம், பிரதாப சந்திர விலாசம் போன்ற நாடகங்கள் தமிழ் நாடக உலகில் எவ்வாறு மாற்றம் ஏற்படுத்தியதோ, அதே போல் ஒரு மாற்றம் 1891 இல் ஏற்பட்டது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவ்வாண்டில் தான் மனோன்மணீயம் என்னும் நாடகத் தமிழ் நூலை முற்றிலும் செய்யுள் வடிவில் எழுதி முடித்தார். தமிழில் புதிய இலக்கியத்தின் தோற்றுவாய் இந்நூல் எனப் பலராலும் பாராட்டப்படுகிறது.

பிற்காலத்தில் பல நூல்கள் தோன்றுவதற்கு மனோன்மணீயம் வழிகாட்டியாய் அமைந்தது.

சுந்தரம் பிள்ளைக்குப் பின் 1896இல் பரிதிமாற் கலைஞர் இயற்றிய ரூபாவதி, கலாவதி ஆகிய செய்யுள் நாடகங்கள் வெளியாயின. நாடக இயல் என்னும் நாடக இலக்கண நூலையும் வெளியிட்டார்.

1889 இல் சீதா கல்யாணம் என்ற நாடகத்தை வேம்பம்மாள் என்ற பெண்மணி இயற்றினார். நாடக ஆசிரியர்களில் முதல் பெண்மணி இவரேயாவார்.

அரசியல் நாடகம்


அரசியல் நாடகம் (Political drama) என்பது ஒரு அரசியல் கூறு கொண்ட ஒரு நாடகம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை விவரிக்க முடியும். இது ஒரு சமூகத்தின் அரசியல் கருத்தை பிரதிபலித்து அல்லது ஒரு அரசியல்வாதி அல்லது தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது.

ஆரன் சோர்க்கின், ராபர்ட் பென் வாரன், செர்கீ ஐசென்ஸ்டைன், பெர்தோல்ட் பிரெக்ட், இழான் பவுல் சார்த்ர, கேரில் சர்ச்சில் மற்றும் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா ஆகியோர் அரசியல் சார்ந்த கதை எழுதுபவர்கள் ஆவார்.

தமிழ் திரைப்படத்துறையில் அரசியல் சார்ந்த அரசியல், அமைதிப்படை, ஆய்த எழுத்து, எல். கே. ஜி,என். ஜி. கே, சகுனி போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ஒரு தொடரும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் உணர்வும், சிந்தனையும் அமைந்த நாடகங்கள் இவை. விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுணர்ச்சியை ஊட்டின. எஸ்.டி.சுந்தரத்தின் வீர சுதந்திரம் என்பது திருப்பூர் குமரன், சுப்பிரமணிய பாரதி, அரவிந்தர் போன்றோர் தம் வீர வரலாறு கொண்டு தொகுக்கப் பெற்றதாகும்.

புராண இதிகாச நாடகங்கள்


புராண காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய கதைகள் முதல் சமூகம், நகைச்சுவை ஆகியவற்றை கொண்ட நாடகங்கள் புராண நாடகங்கள் ஆகும். ராமானுஜர், வாதவூரான், தேவலீலா போன்ற சரித்திர காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய கதைகளை நாடகமாக்கி மக்களின் மனதில் நின்ற நாடகங்கள் இது.

புராண இதிகாசங்கள் தேவையா?

புராண இதிகாச நாடகங்கள் இன்று மக்களுக்குத் தேவையா? எனச் சிலர் நினைக்கிருர்கள். அவர்கள் நாடக நல்லியல்புகளைப்பற்றி அறியாதவர்கள். மேற் போக்காகப் பார்க்கிருர்களே தவிர ஆழ்ந்து சிந்திப்ப தில்லை. புராண இதிகாசக் கதைகளிலே சொல்லப்படும் பேருண்மைகளும் அறிவுரைகளும் இன்று நடை பெறும் சில முற்போக்கு நாடகங்களிலேகூடக் காணப் படவில்லையே! மகாகவி காளிதாசன், பவபூதி முதலி யோரின் நாடகங்கள் புராண இதிகாசக் கதைகள் தாம். மேல்நாடுகளில் இன்றும் அந்த நாடகங்களின் சிறப்பைப் போற்றுகிருர்களே! நடித்தும் வருகிருர் களே! காளிதாசனின் சகுந்தலை நாடகம் சந்திர மண்ட லத்தை எட்டிப் பிடித்த ருசியாவிலும் இன்று நடிக்கப் படுகிறதே!.சென்னையில் எந்தத்தேமிழ்ப் படமும் ஓடாத அளவுக்குப்பல வாரங்கள் ஒடிய பத்துக் கட்டளைகள்' என்னும் திரைப் படம் புராணக் கதைதான்.

சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், மார்க்கண்டேயன் முதலானோரின் புராண வரலாறுகளையும், இராமாயண, மகாபாரதங்களாகிய இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவன இவ்வகையின. லவகுசா இராமாயண அடிப்படையிலும், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் என்பன மகாபாரத அடிப்படையிலும் இயற்றப் பட்டனவாகும். இவற்றில் வசனங்கள் பழங்கால நடையினவாக அமைதல் வேண்டும். ஒப்பனைகளும் கற்பனை நிலையில் பல்வேறு அணிகலன்களும் கிரீடங்களும் (மணிமுடி) கொண்டு அமைக்கப்படுதல் மரபு. பாடல்கள் இவற்றில் மிகுதியாகக் காணப்படும். இவை மேடை நாடகங்களில் செல்வாக்குப் பெற்றவை. இயற்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல தெய்வீக நிலையில் இவற்றில் இடம்பெறும். இதற்கேற்ப மேடையமைப்பு ஏற்பாடுகளும் அமையும்.

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம், சதி அனுசூயா, பவளக்கொடி, அபிமன்யு, பிரகலாதா முதலான நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.

வரலாற்று நாடகங்கள்


அரசர்கள் பற்றிய வரலாற்று நாடகங்கள், அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற புகழ்மிக்க அரசர்களின் வரலாற்றைப் பற்றிச் சான்றாதாரங்கள் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டன.

வரலாற்று நாடகம் வகையான விஷயத்தை உள்ளடக்கத்தை பிரிவின் அடிப்படையில் தியேட்டர் ஒன்றாகும். இது வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்று புள்ளிவிவரங்கள் திறமை அடிப்படையில். மேற்கு, படைப்புகள் இந்த நாடகம், பண்டைய காலத்தில் சேர்ந்தவை. பெயரை பயன்படுத்துவது ஹெகல், அது வேலை, மற்றும் உருவாக்கம் ஒரு முக்கியக் கோட்பாடாக "நம்பிக்கையின் பராமரிப்பு வரலாறு" "ஒரு கடந்தது காலத்தில், வரையப்பட்ட" என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் வரலாற்று தரவு பகுப்பாய்வு, ஆராய்ச்சி ஒரு பெரிய எண் வரலாற்று நாடகம் நாடக தயாரிப்புகளில் படைப்பு கலை செயல்முறை எழுதப்பட்ட வரலாற்று உண்மை இணக்கம் அடிப்படையில் பின்னர் உண்மையான வரலாற்று புள்ளிவிவரங்கள், ஒரு தீம், வரலாற்று நிகழ்வுகள், அடிப்படையில், நாங்கள் திட்டமிடப்பட்டுள்ளது ஒரு பொதுவான உணர்வு தேர்வு நாடக நிகழ்வுகள், மற்றும் கற்பனை, அறிவியல் மற்றும் வரலாற்று நாடகம் பணக்கார மருந்து கொடுக்கவில்லை ஏற்ற பயன்பாட்டை, நாடக மோதல், ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தில் வாழ்க்கை சமூக அம்சங்களை இனப்பெருக்கம் ஆகின்றன.

அறிமுகம்

வரலாற்று நாடகம் (வரலாறு நாடகம்) முக்கிய பாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்வு, அதே போல சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், போன்றவை குவோ போன்ற வரலாற்று உண்மை, கையாளவேண்டும், "க்யூ யுவான்", "Cai Wenji," தியான் ஹேனின் "இளவரசி Wencheng" சாவோ யு தான் "தைரியம் வாள் அத்தியாயம்" முதலியன வரலாற்று நாடகம் நன்கு அறியப்பட்டன.

கலை இன்னும் வாழ்க்கையை விட வாழ்க்கையில் இருந்து வருகிறது. எனவே, வரலாற்று நிகழ்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வரலாற்று நாடகம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாதிரியாக இருக்கும்.

கலை படைப்பு நிச்சயமாக, சில முக்கியமாக நாடகம் என அறியப்பட்ட வரலாற்று பிரதிபலிக்கும் உள்ளன, இருந்தன. உதாரணமாக: "யோங் ஜெங் வம்சம்"; விளையாட்டுத்தனமான என்று சில பொழுதுபோக்கு சார்ந்த வரலாற்று நாடகம் உள்ளன. உதாரணமாக: "க்யான் ஜி மறைநிலை பயண", "காங்க் ஜி மறைநிலை சுற்றுலா" மற்றும் பல. எப்படியும் வரலாற்று நாடகம் வரலாற்றில் அழைக்க முடியாது, ஆனால் அது மக்கள் மற்றும் வரலாற்றில் நிகழ்வுகள் சில காரணமாக இருக்கலாம்.

சீனாவில், வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து வரையப்பட்ட திறமை படி, யாரோ வரலாற்று நாடகம் தியேட்டர் வகையான இந்த வைக்க வரலாற்று நாடகத்தின் பிரிவுகள் புரட்சிகளினது. பிந்தைய புரட்சி வரையப்பட்ட படைப்புகள் பிறகு புரட்சி நவீன வரலாற்றில் குறிப்பாக குறிக்கிறது, முந்தைய காலத்தில் பட்டியல்களின் நீண்ட வரலாறு முன்னாள் புள்ளி வரையப்பட்டன.

வரலாற்று நாடகம் அளவிற்கு வரலாறு, எப்போதும் சர்ச்சை கோட்பாட்டாளர்கள் ஒரு விஷயமாக உள்ளது என்ன விசுவாசமாக இருக்க வேண்டும். பொதுவாக பேசும், வரலாற்று நாடகம் தியேட்டர் கலை ஒரு வகையான, வேலை தேவையில்லை இயற்கை செயல்முறைகள் ஒட்டிக்கொள்கின்றன மற்றும் விவரம் வரலாற்று நிகழ்வுகள் விவரங்கள், மற்றும் நாடக ஆசிரியர் உருவாக்கம் வரலாற்று புள்ளிவிவரங்கள், செயல்திறன் மற்றும் விளக்கம் பிடியில் கவனம் வைக்கப்படும் தேவைப்படுகிறது. பாத்திரம் மற்றும் ஒலிபரப்பு நம்பகத்தன்மையை வரலாறு, அடிப்படை அளவுகோல் வரலாற்று நாடகம் படைப்புகள் மதிப்பீடு இருக்க வேண்டும், அது நாடக ஆசிரியர் தொடர்ந்து அடிப்படை கொள்கை இருக்க வேண்டும். இந்த கொள்கை நடத்துவதில், நாடக ஆசிரியர், வரலாற்று நிகழ்வுகள், மட்டும் அதன் இயற்கையான போக்கில் மாற்ற முடியும் வழக்கமான, செயலாக்க வடிவமைக்கும் வேண்டும் அடிப்படையில், மற்றும் அறிவியல் மொழிபெயர்க்கப்பட்ட முடியும்.

மூவேந்தர் வரலாறு

இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் செய்திகள், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் முதலானவற்றைக் கொண்டு சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றை நாடகங்களாக ஆக்கியிருக்கிறார்கள். உண்மை நிகழ்ச்சிகளுக்கும் இடம் தந்து கற்பனை கலந்து இந்நாடகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கலைச்சிறப்பும், கற்பனைச் சுவையும், கருத்துச் செறிவும் கலந்து இவை படைக்கப்பட்டிருக்கின்றன.

சேரர்
சிதம்பர நடராஜ சுந்தரம் என்பார் இளங்கொடியாள் என்னும் நாடகத்தைப் படைத்திருக்கிறார். இந்நாடகம் சேரன் செங்குட்டுவன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

சோழர்
ஏ.கே. இராமச்சந்திரன் எழுதிய இளவரசன் குலோத்துங்கன் நாடகம் இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. அரு.ராமநாதனின் ராஜராஜ சோழன் நாடகம் குறிப்பிடத்தக்கது. இது டி.கே.எஸ். சகோதரர்களால் வெற்றிகரமான நாடகமாக நடிக்கப்பட்டது. இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. எஸ்.பி.மணியின் முடிந்த கோயில் ராஜேந்திர சோழன் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. கோவிந்தராஜ் நாட்டாரின் இராசேந்திரன் நாடகமும் இத்தகையதே.

ராஜ ராஜ சோழன்
மாமன்னன் ராஜராஜன் ராஜதந்திரத்தில் சிறந்தவன் என்று காட்டுவதாக நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. மகளின் காதலை ஆதரித்துப் பின்னர் காதலனைச் சிறை செய்வதும், தீயவரை நம்பி நல்லவரைப் புறக்கணிப்பதும் என்று முன்னுக்குப்பின் முரண்பாடான செயல்பாடுகளைக் கொண்டவனாக ராஜராஜ சோழன் படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் இறுதியில் இதெல்லாம் ராஜதந்திரம் என்று உணர்த்தும் வகையில் தன் அறிவுத்திறனைப் புலப்படுத்தி அனைவரையும் வியக்க வைக்கிறான்.

முடிந்த கோயில்
இந்நாடகத்தில் ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியார் அனைவரையும் ஆட்டுவிக்கும் திறனுடைய பெண்மணியாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். குந்தவையின் மகளான இளங்கோப் பிச்சியை இளவரசன் இராசேந்திரன் காதலிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் இறுதியில் திருமணத்தை நடத்தி வைப்பதாக நாடகம் படைக்கப் பட்டுள்ளது.

பாண்டியர்
ஆர்.சி.தமிழன்பனின் பாண்டிய மகுடம் பாண்டிய இளவரசர்களின் அரசுரிமைப் போரையும், ஒற்றுமையின்மையையும் புலப்படுத்தும் நாடகமாக அமைந்துள்ளது.

நாயக்கர் வரலாறு

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி தமிழகத்திலும் விரிவாக்கப்பட்டது. மதுரையிலும், தஞ்சையிலும், நெல்லையிலும் நாயக்கர் ஆட்சி வேரூன்றியது. குறிப்பாக விஸ்வநாதன் என்கிற படைத்தலைவனும், திருமலை நாயக்கனும், ராணி மங்கம்மாளும் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இக்காலக் கட்ட வரலாற்றைப் படைப்பாளர்கள் நாடகங்களாகப் படைத்துள்ளனர். தஞ்சை நாயக்கர் வரலாற்றை விதியின் வலிமை என்ற பெயரில் பி.எஸ்.சுப்பிரமணியம் நாடகமாக்கியுள்ளார்.

விஸ்வநாதம்
விஸ்வநாதனின் வரலாற்றை சி.எஸ்.முத்துசாமி ஐயர் விஸ்வநாதம் என்ற பெயரில் கவிதை நாடகமாக ஆக்கியிருக்கிறார். விஜய நகர மன்னரால் மதுரைக்கு அனுப்பப்பட்ட விசுவ நாதநாயக்கனின் வீரம், காதல் முதலானவை பற்றி நாடகம் விளக்குகிறது. காஞ்சனைக்கும் விசுவநாதனுக்கும் இடையிலான உண்மைக் காதல் உளம் கவரும் வகையில் சித்திரிக்கப் பட்டுள்ளது.

மறைந்த மாநகர்
என்.கனகராஜ ஐயர் படைத்த மறைந்த மாநகர் கிருஷ்ண தேவராயர் காலத்தில், விஜய நகர ஆட்சி பெற்றிருந்த உயர்வையும், இராமராயர் காலத்தில் வீழ்ச்சியுற்றதையும் சித்திரித்துக் காட்டுகிறது. நாடக ஆசிரியர் இதன் வாயிலாக நிலையாமையையும் புலப்படுத்துகிறார்.

ராணி மங்கம்மாள்
கே.எம்.பக்தவத்சலம் படைத்த ராணி மங்கம்மாள் வரலாற்று ஆதாரங்களை மிகுதியாகக் கொண்ட நாடகம். சுத்தானந்த பாரதியார் படைத்த இராணி மங்கம்மாள் நாடகம், அவளது ஆட்சித் திறனை விளக்குவதாக அமைந்துள்ளது. மங்கம்மாள் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது.

திருமலை நாயக்கர்
ஆறு.அழகப்பன் படைத்த திருமலை நாயக்கர் நாடகம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் சிறந்தவரான திருமலை நாயக்கரின் வரலாற்றை நுணுக்கமாகக் காட்டுகிறது. அக்காலத்தில் இருந்த குமரகுருபரர், ராபர்ட் டி நொபிலி முதலானவர்கள் பற்றிய வரலாறுகளும் இதில் காட்டப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரின் ஆட்சி வல்லமை, வீரம், கலை ஆர்வம், மனிதாபிமானம் முதலானவற்றை விளக்குவதாக நாடகம் அமைந்துள்ளது. பாடல்கள், பழமொழிகள் முதலானவற்றுடன் இந்நாடகம் அமைந்துள்ளது.

பிற மன்னர்கள்
வேங்கி நாட்டு அரசுரிமைப் போர் பற்றி ராஜநீதி என்ற நாடகத்தை மக்களன்பன் எழுதியுள்ளார். எஸ்.மகாதேவனின் தெள்ளாற்று நந்தி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறெறிந்த நந்தி, கண்ணன் எழுதிய நந்திவர்மன் முதலானவை பல்லவர் வரலாற்றைக் காட்டும் நாடகங்கள். பி.கே.சுப்பராஜின் வீரபாண்டிய கட்டபொம்மன், கண்ணன் எழுதிய வேங்கை மார்பன், மாலிக்காபூர் முதலானவை நல்ல வரலாற்று நாடகங்கள். தாமரைக் கண்ணனின் சாணக்கிய சாம்ராஜ்யம், சாணக்கியனின் அரசியல் தந்திரங்களையும், சந்திரகுப்தனின் அரசியல் திறமைகளையும் காட்டியது. அரு.ராமநாதனின் சக்கரவர்த்தி அசோகன், மதுரை திருமாறனின் சாணக்கிய சபதம் முதலானவை வடநாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள்.

பெரியார்களின் வரலாறு
புகழ் பெற்ற மனிதர்களைப் பற்றிய நாடகங்களையும், வாழ்க்கை வரலாறு போலப் படைத்திருக்கிறார்கள். இவற்றையும் வரலாற்று நாடகங்களாகவே கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரையான செய்திகளும் இவற்றில் இடம்பெறக் கூடும். புலவர்கள்
திருவள்ளுவர் வரலாற்றை ஆறு.அழகப்பன் திருவள்ளுவர் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். வழித்துணைவன் திருவள்ளுவர் என்ற நாடகத்தின் மூலம் வள்ளுவரைப் பற்றியுள்ள வாழ்க்கைச் செய்திகள், கருத்துகள் அனைத்தையும் அளிக்கின்றார். எத்திராஜ் அவ்வையார் என்ற நாடகத்தைச் சங்க இலக்கியம் மற்றும் புனைகதைகளைக் கொண்டு எழுதியுள்ளார். இன்குலாப் படைத்த ஒளவை பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. மு.வரதராசனாரின் இளங்கோ நாடகமும் இத்தகையதே. சி.எஸ்.சச்சிதானந்த தீட்சிதரின் காளிதாசன், சுத்தானந்த பாரதியின் மகாகவி காளிதாசன் நாடகம் முதலானவையும் குறிப்பிடத்தக்கன. சமயப் பெரியார்கள்
அன்னபூரணி அம்மாளின் சங்கர விஜய விலாசம், ஆதிசங்கரரின் வரலாற்றைக் கூறுகிறது. கிருபானந்த வாரியாரின் ஸ்ரீ அருணகிரி நாத பாவலரின் கபீர்தாசர் நாடகம், திருமலை நல்லானின் மார்கழி நோன்பு அல்லது ஆண்டாள் வரலாறு, மதுரை பத்மனாபனின் வள்ளலார் நாடகம் நாரண துரைக்கண்ணனின் திருவருட்பிரகாச வள்ளலார் முதலானவையும் குறிப்பிடத் தக்கவை.

பல்வகை வரலாறுு

அரசாண்ட மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய கதைகளும், மன்னர்களைப் பற்றிக் கற்பனையுடன் அமைக்கப்பட்ட கதைகளும் நாடகங்களாக இயற்றப்பட்டன. அதைப் போல சாதி, சமயம் முதலியவை பற்றிய வரலாற்று நாடகங்களும் வெளிவந்தன.

வரலாற்றுக் கதை
தெருக்கூத்துகளில் புராணக் கதைகளே இடம் பெற்றன. பின், சில வரலாற்றுக் கதைகளையும் கூத்துகளாக மாற்றி நிகழ்த்தினர். கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், ராஜா தேசிங்கு முதலானவர்களின் வரலாறுகள் கூத்துகளில் இடம்பெற்றன. அர்ச்சுனனையும் துரியோதனனையும், இராமனையும் இராவணனையும், முருகனையும் சூரபதுமனையும் கூத்தில் கண்டிருந்த மக்களுக்கு வரலாற்று நாயகர்கள் புதுமையாகத் தோன்றினார்கள்.

கட்டபொம்மு கதை
வரலாற்றுக் கதை, கூத்தாக ஆக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக அடைக்கல புரம் சிதம்பர சுவாமிகள் இயற்றிய கட்டபொம்மு கூத்து பற்றிக் காண்போம். இதிலுள்ள செய்திகள் புதுமையாகத் தோன்றின. கட்டபொம்மனின் உரிமை உணர்வு கூத்தில் புலப்படுத்தப்பட்டது. வரலாற்று அடிப்படையில் இருந்த கூத்துகள் நாடகங்களாக ஆக்கப்பட்டன.

சாதி நாடகங்கள்
வரலாற்றுக் கூத்துகள் நாடகமாக்கப் பட்டதைத் தொடர்ந்து பல நாடகங்கள் வெளியாயின. சோகி நாடகம், கார்காத்த நாடகம், தட்ட நாடகம் என்று சாதி பற்றிய வரலாற்று நாடகங்கள் எழுந்தன.

இசுலாமிய நாடகங்கள்
முகமது இபுராகிம் அவர்களின் அப்பாசு நாடகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் அலிபாதுஷா நாடகம், தையார்சுல்தான் நாடகம் முதலான இசுலாமிய நாடகங்கள் வெளியாயின.

கிறித்தவ நாடகங்கள்
ஞான சௌந்தரி நாடகம், வேதநாயகம் பிள்ளை வாசகப்பா முதலான கிறித்துவ நாடகங்களும் வெளியாயின.

கணினித் தமிழ்


கணினி ஒரு மின்னனு சாதனமாகும். இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இவ்வியந்திர மொழி அடிமான எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. (0 மற்றும் 1) மையச்செயலகம்(CPU) எனும் செயலக அமைப்பு, இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது.

கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக் கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்களும் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

தமிழில் முதல் மென்பொருள்:
இவற்றின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பலனாக முதலில் தோன்றிய மென்பொருட்களில் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும். இது 1984 இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய IBM DOS 2.x இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் MS Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாக பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந் நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.

தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்:
80 களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை.

1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப் பட்டது. ஆதமி(1984) உருவாகும் முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு LaTex எழுதியில் பாவிக்க wntamil என்னும் எழுத்துரு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது. இந்த எழுத்துருக்களை கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே பாவிக்கப் பட்டது. அதாவது அம்மா என்பதை ammaa என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும். எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுத முடிந்தது. இக்கால கட்டத்தில் பல எழுத்துருக்களை பல வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன. இவ் வெழுத்துருக்களில் கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்கு கருநாடக இசை இராகங்களின் பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கி கல்வி என்னும் பயன்மென்பொருட்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மைலை (Mylai)யும், பாமினி (Bamini) போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன.

விசைப் பலகைச் சிக்கல்கள்:
எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரு பெரிய சிக்கல் எழுத்துக்களை அடிக்கத் தேவையான விசைப்பலகை (keyboard) தான். கணினியில் இருக்கும் விசைப் பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்கு மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பரவலாக அறியப்பட்டன. அங்கே இருந்த கணினி வல்லுநர்கள், பத்திரிக்கைகள், இதழ்கள் அல்லது சஞ்சிகைகள் போன்றவற்றை நடத்தும் எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்கள் நத்தை வேகத்தில் தான் இதைப் பயன்படுத்த முடிந்தது.

பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்:
இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு தகுதரத்தையும் (standards) கடைப்பிடிக்கவிலை. தரங்கள் ஏதும் வகுக்கப் படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு (வீதம்) சரியாக ஒத்தியங்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களிலிலும் சங்கடங்கள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.

அறிவியல் தமிழ் இலக்கியம்


தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.

தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.

அறிவியல் என்பது தனிப்பட்ட மனிதருக்கோ நாட்டிற்கோ உரியதன்று. அது உலகம் முழுமைக்கும் பொதுவானது. அறிவியலின் பயன்களைப் படித்தவர், படிக்காதவர் என்னும் வேற்றுமையின்றி அனைவரும் துய்க்கின்றனர். மெல்ல மெல்ல வேரூன்றிய அறிவியல் வளர்ச்சி இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரந்துள்ளது. அறிவியலுக்கு மொழிக் கட்டுப்பாடு இல்லை. அதன் எல்லையற்ற சாதனைகளுக்கு மொழி தடையாக இல்லாமல் கருவியாக மட்டுமே இயங்கி வந்துள்ளது. பல்வேறு தொடர்புக் கருவிகளால் சுருங்கிவிட்ட உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் புதுமைகளையும் பிற அறிவியல் சார்ந்த, சாராத உண்மைகளையும் ஒவ்வொருவரும், குறிப்பாக மாணவர்கள் அறிதல் இன்றியமையாதது. இந்த அறிவுப் புரட்சியில் மொழியும் தன்னை ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்வதால் பிற நாட்டவரோடு போட்டியிடும் தகுதியையும் பெறுகிறது.

உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டியுள்ள நமக்குத் தாய்மொழிவழிக் கல்வி பெரிதும் பயனளிக்கும். பிற மொழியில் பயிலும் போது, அம்மொழியின் கருத்துக்களைத் தம் மொழிக் குறிப்புகளாக மாற்றிச் சிந்திப்பதைத் தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தாய்மொழியில் பயின்று அதனால் கிடைக்கும் அறிவின் மூலம் விளையும் சிந்தனைகளே சிறப்பானவையாக விளங்கும் என்பதை வரலாற்று உண்மைகள் உணர்த்துகின்றன. வாழ்வியல், அறிவியல் ஆகிய இரு பெரும் பிரிவுகளிலும் இதற்கான சான்றுகள் மிகுந்துள்ளன. ஏட்டறிவு பெறாதோரும் தத்தம் மொழியில் வழங்கப்படும் பிற குறிப்புகளை எளிதில் புரிந்து கொள்கினறனர். எனவே, வாழ்க்கையோடு இணைந்துவிட்ட தாய்மொழியில் பயில்வதும், கற்பிப்பதும் சிறப்பான விளைவுகளை உண்டாக்கும் என்பது கண்கூடு. இவ்வுலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சான்றாகக் கொண்டால் அந்நாடுகளிலெல்லாம் தாய் மொழிவழியே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட்டு வருவதைக் காணலாம். இங்கிலாந்தின் ஆதிக்கம் உலகின் பல நாடுகளில் பரவியிருந்தமையால் அது மிகப்பெரும்பாலோரால் பேசப்படும் மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் உள்ளது. உலகக் கண்டுபிடிப்புகளின் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உடனடியாகக் கிடைக்கின்றன. பிற நாடுகளில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை சீனாவில் அவர்கள் மொழியில் மொழிபெயர்த்துத் தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்கின்றனர். இதனால் மொழி என்பது அறிவியலைப் பொருத்தவரை தொடர்பு ஊடகமாகவே செயல்படுகிறது. அந்தத் தொடர்பு ஊடகம் தாய்மொழியாக இருப்பின் கற்பதும் கற்பிப்பதும் எளிதாக அமையும்.

அடிப்படை அறிவியல் கருத்துகளைக் கொண்டு தன் முயற்சியால் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, வலுவான அடித்தளமும், தெளிவான சிந்தனையும் தேவை. சிந்தனயில் தெளிவு இல்லாவிடில் புதிய கருத்துகளை உருவாக்கவோ, செயல்படுத்தவோ இயலாது. பத்து பக்கப் பாடத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை 10 நிமிட செய்முறைப் பயிற்சி மூலம் அறிமுகப்படுத்திவிடலாம். ஏட்டளவில் உள்ள செய்திகளை நேருக்கு நேர் செய்முறைப் பயிற்சி அளிப்பதன் மூலம் மனதில் ஆழமாகப் பதியவைப்ப‌தும், அந்தப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தாமே பிற பயிற்சிகளுக்கு முயலுவதும் ஆகும். இந்நிலையில் நூல் வழிக் கல்வி, அறிமுறைக்கல்வி ஆகியவற்றை நம் தாய் மொழியாம் தமிழ் வழியாகக் கற்பிப்பதால் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் உயரும் எனலாம்.

தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்வியல், அறிவியல் பாடங்கள் தமிழ் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையில் கற்பிக்கப்படுகின்றன. அரசுக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வழங்கப்படுகின்றது. ஆனாலும் தாய்மொழிவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மேல்நிலைப் பள்ளி வரையில் பெரும்பான்மையாக‌ இருக்கும்போது உயர் கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் குறைவாகவே இருக்கின்றன. ஆங்கிலப் பயிற்று மொழி வழிப் பட்டத்தைப் பெறும் மாணவர்கள் ஆங்கிலத்திலோ பிற பாடத்திலோ தெளிவு பெற்றுள்ளனரா என்றால் அதுவுமில்லை. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் அங்கேயும் இங்கேயும் அரைகுறைதான். இது அறிவில் கூறுகளையும் கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் நெட்டுரு செய்வதனால் ஏற்படும் தேக்க நிலையாகும். இதனால் சிந்தனைத் தெளிவு ஏற்படாது. குறிப்பிட்ட பாடத்தின் உண்மைகளைப் பிழையறக் கற்றிருந்தால் மட்டுமே இதனைச் செய்ய இயலும். இயல்பாகவே வீட்டுமொழியாகவும், வாழ்க்கை மொழியாகவும் இருக்கும் தமிழ் வழிக் கல்வி விரைவாகப் புரிந்து கொள்வதற்கும் அதன்வழி சிந்திப்பதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன.
மேலும் ஒருவர் கல்லூரியில் படிக்கும் கல்விக்கும் அவர் பணியமர்த்தப்படும் வேலைக்கும் சிறிதும் தொடர்பிருப்பதில்லை. அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று விட்டு வங்கி, பிற அரசு, தனியார் நிறுவனங்களில் எழுத்தர்களாகவும், தட்டச்சர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். ஆகவே, அவர் அறிவியல் பாடத்தில் பெற்ற பயிற்சியும், கல்வியும் அவர் பட்டம் பெறுவதற்காகத் தனிப்பட்ட முறையில் செலவு செய்த பணமும், அவருக்காக அரசு செலவிட்ட பணமும் வீணாகின்றன. வங்கிகளில் பணியாற்ற அதற்கென பட்டப் படிப்புகள் தனியே உள்ளன. எனவே, வாழ்வியல், அறிவியல் பிரிவுகளில் பயில்வோருக்குமிடையே எந்த வேறுபாடும் இருப்பதில்லை. இதனைத் தவிர்க்க அறிவியல் சார்புடைய மிகுதியான நிறுவனங்களை அரசும், தனியாரும் நிறுவ வேண்டும். அறிவியல் ஆய்வுகள் பிறநாடுகளுடன் போட்டியிட்டு நடைபெறுவதற்கும், தமிழில் அறிவியல் பாடங்களை மாணவர்கள் கற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது அறிவியல் ஆய்வு இதழ்களை வெளியிடுதல், மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பொழுதுபோக்கு அறிவியல் படக் கதைப் புத்தகங்கள் வெளியிடுதல், அறிவியல் ஆண்டு விழா நடத்துதல், அறிவியல் மன்றங்கள் ஏற்படுத்துதல், ஒலி, ஒளி நாடகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களைப் பரப்புதல் ஆகியன‌ பெரிதும் துணைபுரியும். தற்போது பிற கலைத் தொடர்பாக வெளியிடப்படும், வார மாத இதழ்களை ஒப்பு நோக்கும் போது, அறிவியலில் வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஹெல்த் துளிர், விஞ்ஞானச்சுடர், கலைக்கதிர், கால்நடைக் கதிர், உங்கள் உடல்நலம், விஞ்ஞானச் சிறகு, வளரும் வேளாண்மை போன்ற குறிப்பிட்ட இதழ்களே அறிவியல் பரப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இவ்விதழ்களின் வாசகர்கள் மிகக் குறைவு. இவை போன்ற பிற அறிவியல் ஏடுகளை சேவையாகக் கருதி பல்கலைக் கழகங்கள் வெளியிட முன்வரவேண்டும். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் குறிப்பிட்ட அறிவிய‌ல் துறைகளில் ஆய்விதழ்களின் சுருக்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றனர். இதே போல் அறிவியல் துறைகள் அனைத்திலும் நிகழும் செய்திகளை மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்கவும், அச் செய்திகளைப் பாதுகாக்கவும், ஒரு தனி அமைப்பை நிறுவ வேண்டியது மிக இன்றியமையாததாகும்.

ஜப்பான் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த நாடுகளில், ஆங்கில மொழியில் வெளியான அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், தாய்மொழியில் மொழி பெயர்த்து ஆய்வாளர்களுக்கு வழங்கிவிடுகின்றனர். இதனால ஆய்வுத் தேக்கநிலை ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. தமிழிலும் இவ்வாறு செய்யலாம். தொடக்கத்தில் கலைச்சொற்களை மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்கள் எழலாம். ஒவ்வொரு அறிவியல் பிரிவிற்கும் தனித்தனிக் குழுவினரை நியமதித்து, தற்போது வழக்கில் உள்ள சொற்களையும், புதிதாக உருவாக்கப்படும் சொற்களையும் ஆராய்ந்து ஏற்புடையவற்றை ஏற்று அவற்றையே அனைவரும் பயன்படுத்த ஆணையிட வேண்டும். தொடக்கத்தில் சில இடர்பாடுகள் நேரிடினும் நாளடைவில் சீரும் செம்மையும் பெற்றுவிடும்.

அரசு, எவ்வழி, மக்கள் அவ்வழி என்பார்கள். மருத்துவம், பொறியிய‌ல் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக, பயிற்சி மொழியாகச் செயல்படுத்த அரசு ஆவண‌ செய்ய வேண்டும். இது எளிதில் இயலுமா என வினவுவோர்க்கு நாம் அளிக்கும் பதில் ‘ஆம் முடியும்’ என்பதே. ஒரு சிறிய உத்தரவின் மூலமே இம்மாபெரும் சீர்திருத்ததத்தைச் எளிதாக மேற்கொள்ள முடியும்.

தமிழ் வழியாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அறிவியல் பயிற்றுவிக்கப்படும்போது அதில் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு தேடிப் பிற இடங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். உடனுக்குடன் கிடைக்கப் பெறயியலாத நிலையில் இவர்களின் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படும் எனச் சிலர் வாதிடுகின்றனர். இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை. ஏனெனில் நாம் ஆங்கிலத்தையோ, பிற மொழிகளையோ கற்பதைத் தடை செய்யவில்லை 'ஒரு மொழி என்ற அளவில்'. ஆனால் அதில் படித்தால் தான் நன்கு கற்க முடியும்; ஆராய இயலும் என்பதையே மறுக்கிறோம். மேற்சொன்ன கூற்றில் உண்மை இருக்குமெனில் நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் படித்தோரின் எண்ணிக்கைக்கும் இந்திய அறிவிய‌ல், பொருளாதார அறிவு ஆய்விற்கும் தொடர்பின்றிப் போகுமா? ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கும் நாட்டில் ஏராளமான ஆய்வுகளும் போட்டியிடும் அளவுக்கு உண்டாயிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமையே வேறு. நாம் வெறும் பட்டதாரிகளை அதாவது தொடர்பில்லாத பணிக்குரிய கல்வியைத் தான் கற்றுக் கொடுத்து வருகிறோம். எனவே, கல்வியையும் வேலை வாய்ப்பினையும் தகுந்த முறையில் தொடர்பு படுத்த வேண்டும்.

இந்நாளில் கணிப்பொறி நுழையாத துறையே இல்லை எனலாம். எதிர்வரும் காலத்தில் கணிப்பொறி இல்லாமல் எந்தவொரு பிரிவும் செய‌ல்பட இயலாத நிலைகூட ஏற்படலாம். கணிப்பொறியைப் பயன்படுத்தித் தமிழ் மொழி வழிக் கல்வியைக் குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில் முறையில் பாடங்களைப் படிப்பதற்கு மாணவர்களிடயே ஆர்வத்தை ஏற்படுத்த முறையான பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்த வேண்டும். தெளிவான தொலைநோக்கு, வலுவான அடிப்படைக் கல்வி, முறையான அறிமுறைப் பயிற்சி ஆகியவை மனித வள மேம்பாட்டிற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் சிறப்பாகத் தேவைப்படுவன. நர்சரிப் பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் பெருகிவரும் இந்நாளில் தமிழில் அறிவியல் உட்பட அனைத்தும் என்னும் முழக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக் கட்டுரை

ஆய்வு என்பது 'ஆய்தல்'. பகுத்துப் பார்த்தல். ஆராய்தல் என்று பொருள். அதாவது நாம் விரும்பும் ஏதோவொன்று சார்ந்து நமக்கு 'எழும்' ஐயம் குறித்துச் செய்வதே ஆய்வு. எனவே முன்முடிவுகள் ( Prejudice ) கொண்டு ஆய்வைத் துவங்க முடியாது. அறிந்துகொள்ள முற்படுவதே ஆய்வு.ஆய்வு என்பது அறிவு சார்ந்தே தவிர உணர்வு சார்ந்து இருத்தலாகாது.


ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை:

  • தங்கள் ஆராய்ச்சியின் நோக்கம் மற்றும் நன்மைகளை விவாதிக்க வேண்டும். Methods : தங்களது செய்முறை, பயன்படுத்த கருவிகள், ரசாயனங்கள், நேரம், காலம், அளவு, செறிவு என அனைத்தையும் சுருக்கமாக எழுத வேண்டும். எழுத்து நடை : தங்களது செய்முறையை விவாதித்தலில் Past tense ல் Passive Voice ஆக இருக்க வேண்டும்.

  • உண்மைத்தன்மையை நோக்கிய பயணமாக இருக்கவேண்டும் ( Towards truth ). நமது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளத் தேவை இல்லை , ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருத்தல் வேண்டும்.

  • நாம் இன்று ஆராய்ந்து சொல்லும் ஒரு விஷயம் நாளை வேறொருவரால் , காலத்தால் , அதிநவீனக் கருவிகளால் தாண்டிச் செல்லப்படும் என்பதையும் உணர வேண்டும். There is no absolute truth.

  • நமக்கு முன்னர்ச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளைக் கவனமாகப் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல நூல்கள் பல கற்றறிந்திருத்தல் வேண்டும்.

  • மனித குலத்திற்கும் இயற்கைக்கும் நன்மை விளைவிக்க வேண்டும்.

  • அறிவு சார்ந்து நிரூபிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். Scientific Approach

  • எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையும் அறமும் ( Righteousness ) இருத்தல் வேண்டும். இவையனைத்தையும் உணர்த்தும் விதமாக 'ஆய்வுக்கட்டுரை' இருத்தல் வேண்டும்.

    ஆராய்ச்சி கட்டுரைகளின் வகைகள்:

    ஆராய்ச்சி கட்டுரைகள் பலவகைகள் உண்டு. இவைகள் ஆராய்ச்சி கட்டுரையின் நீளம் மற்றும் வடிவத்தை பொறுத்தது.

    Communication : நீங்கள் ஆராய்ச்சியில் ஆரம்ப புள்ளியை முடித்துள்ளீர், தொடர்ந்து செய்வேன். மற்றவர் வெளியிடும் முன்னர் நான் இந்த துறையில் வேலை செய்கிறேன் என்பதனை காட்டும் விதமாக ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல். இதனை Communication என்பர், இதன் மொத்த நீளம் 4 பக்கங்கள்.

    Letter : இது அடுத்த கட்டம், பாதி ஆராய்ச்சியை முடித்துள்ளீர், மீதியை செய்து கொண்டிருக்கிரீர்கள், இதனை Letter வடிவில் வெளியிடலாம். இவை 4- 8 பக்கங்கள் வரை எழுதலாம்.

    Full article : இவை முழுவதும் முடித்த ஆராய்ச்சி, 8 - 32 பக்கங்கள் அல்லது அதற்கும் மேலாக கூட எழுதலாம்.

    Review article : இது ஆராய்ச்சி கட்டுரை அல்ல, மற்ற ஆராய்ச்சிகளின் தொகுப்பு கட்டுரை, பக்கங்களுக்கான வரையறை இல்லை.
    இது மட்டுமில்லாமல் Short communication, Emerged article, Extensive letter என பல்வேறு வகைகள் உண்டு.

    ஒரு ஆராய்ச்சி எப்போது முடியும் என கணிக்க முடியாது, சில நேரங்களில் 10 ஆண்டுகள் அதற்கு மேலாக கூட எடுக்கும். நம்மை போன்றே வேறு யாராவது அதனை ஆராய்ச்சி செய்து நமக்கு முன்னர் வெளியிட்டால் நாம் செய்ய அனைத்தும் வீணாகிவிடும். இந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடக்கும். இதனை தவிர்க்கவே அவ்வப்போது கட்டுரை வெளியிடுதல் அவசியமாகும்.

    கல்வி ஆய்வுக்கட்டுரையை எழுதுவதற்கான அவசியமான படிமுறைகள்

    ஆய்வுக்கட்டுரை என்பது ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சியினைப் பற்றிய விரிவான எழுத்தறிக்கை. அதன் மூலமே அந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் அல்லது சாமானிய மக்கள் மத்தியில் ஆதாரத்துடன் தன் ஆராய்ச்சியினை நிகழ்த்திக் காட்டி அங்கீகாரம் பெற முடியும்.

    • திட்டவரை

      முதலில் நம் ஆராய்ச்சிக்கான கருப்பொருட்கள், அவற்றுக்குத் தேவைப்பட்ட வழிமுறைகள், பொருட்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.

    • அமைப்பமறையை தெரிந்துகொள்ளுதல்
      கல்வி ஆய்வுக்கட்டுரையை முன்மொழிவதற்கான கூறுகளை, அதை வகுப்பதற்கான படிநிலைகளாக எழுத வேண்டும்.
      1. ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
      • ஆராய்ச்சிக்கான காரணம் மற்றும் ஆராய்ச்சியின் பயன்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டும்

      • எந்த நடைமுறை பிரச்சனை அல்லது இடர்களை சரி செய்யும் விதமாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை எளிமையாக புரியும் வண்ணம் விளக்கியிருக்க வேண்டும்


      2. முன்னுரை
      • தொடக்கத்தில் எந்த மாதிரியாக பிரச்சனைகளை கையாண்டு, இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது என்பதையும், எந்தத் துறை அடிப்படையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருக்க வேண்டும்

      • முழு ஆய்வுக்கட்டுரைக்கும் ஆதாராப்புள்ளியாக அமைந்தவற்றைப் பற்றி கூறியிருக்க வேண்டும்


      3. முந்தைய ஆய்வுத்தொகுப்புை
      • இதற்கு முன் யாராவது மேற்கொண்ட ஆராய்ச்சிகளை ஒருவர் அடிப்படையாக எடுத்துக்கொண்டால், அந்தத் ஆராய்ச்சியினால் ஒருவர் பயன்படுத்திக் கொண்ட முறைகள் மற்றும் அதிலிருந்து மேம்பட்டவைகளை எடுத்துரைக்க வேண்டும்


      4.ஆய்வின் காரணம்
      • ஆய்வின் காரணத்தை விரிவாக விளக்கி, இந்த ஆய்வின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா, என்பதையும் கூற வேண்டும்


      5. அணுகுமுறை
      • முறைகள்
        எந்தெந்த முறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதோ, அதன் வழியே ஈட்டிய பலனைப் பற்றி விளக்க வேண்டும்
        எத்தனை முறைகளை எவ்வாறெல்லாம் கையாண்டுள்ளோம் என்பதை விளக்க வேண்டும்

      • மூல நூற்பட்டியல்
        நம் ஆராய்ச்சியினைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கவும், சில முறைகளைப் பற்றிய தெளிவான அறிவும் கிடைக்கப்பெற்ற நூற்பட்டியலை இணைக்க வேண்டும்
        ஆய்வுக்கட்டுரை இயற்றிவர்களின் பெயர்கள், நூலின் பெயர், இடம், வெளியீட்டாளர், வெளியிட்ட ஆண்டு, எந்த ஊடகத்தின் வழியே வெளியிடப்பட்டது என்ற விவரங்களை எல்லாம் இணைக்க வேண்டும்


      6. சாத்தியமாகும் பலன்கள்ை
      • இந்த ஆய்வின் வழியே சாத்தியமாகும் பலன்களைப் பற்றிய விரிவான விளக்கம் தர வேண்டும்

      • கணக்கீடுகள், விளக்கப்படம், வரைபடம், சமன்பாடு போன்றவை தேவைபட்டால் அவற்றையும் இணைக்க வேண்டும்


      7. வரம்புகள்
      • இந்த ஆய்வு சில இடர்களைக் களைந்து, ஒரு நோக்கத்திற்கு உதவினாலும், இந்த ஆய்வின் நடைமுறை சிக்கல்கள், சவால்களைப் பற்றி விளக்க வேண்டும். உதாரணமாக, சூரிய ஒளியினைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி என்றால், இதை கோடைகாலத்தில் மட்டுமே ஆற்றல்மிக்கதாக பயன்படுத்த முடியும் என்பது போல இந்த ஆய்வு நல்ல முறையில் வெற்றிபெற தடை போடும் சில சிக்கல்களை கண்டறிந்து விளக்க வேண்டும்


      8. பங்களிப்புகள்
      • ஏற்கனவே இருக்கும் தொழிற்நுட்பமும், கண்டறிந்த நுட்பமும் போக இந்த ஆராய்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த புதுமையான கோணங்களை விளக்க வேண்டும்

      • ஒருவர் யாருடைய துணையுமின்றி தானே கண்டறிந்தவற்றைப் பற்றிய விளக்கங்களை எழுத வேண்டும்


      9. முன்மொழியப்பட்ட விளக்கவுரை
      • நம் ஆராய்ச்சியின் ஆதாரங்களை சரியாக பகுப்பாய்ந்து அவற்றை சரியான தலைப்புகளுடன் பொருத்தி விளக்கியிருக்க வேண்டும்

      • அந்த விளக்கங்கள் எளியவருக்கும் துறைசார் அறிவும் இல்லாதவர்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும்


      10. முடிவுரை
      • இறுதியாக இந்த ஆய்வின் முழுமுதற் பலன் கிடைத்தால், அது எவ்வாறு பயன் தரும், யாருக்கு எந்த சூழ்நிலையில் பயன்தரும் என்பதையும் கூற வேண்டும். அதை எளிய முறையில் விளக்கி முற்று பெறச் செய்ய வேண்டும்

    • எழுத்துக்கான திட்டமிடல்
      1. ஆய்வினை எழுத்து மூலமாக ஒருவருக்கு எவ்வாறு புரிய வைப்பது என்பதை சரியாக திட்டமிட்டு, முறையான தலைப்புகளும், அந்த தலைப்புகளை நியாயப்படுத்தும் விதமாக கட்டுரையை இயற்ற வேண்டும்

      2. ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு படியாக ஆய்வினை விளக்கும் படி இருக்க வேண்டும், முழுவதுமாக எந்த முறையும் இல்லாமல் வெறுமென விளக்கியிருந்தால், அவற்றை படித்து உறுதி செய்பவர் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்

      3. திட்டமிட்டு எழுதி முடித்ததும், அனைத்தையும் மீண்டும் வாசித்து பிழைகளை சரிசெய்ய வேண்டும், சீரமைப்பு தேவைப்பட்டால் அதையும் செய்ய வேண்டும்

    • ஆதாரப்பூர்வமாக எழுதுதல்
      1. ஆய்வைப் பற்றி ஒவ்வொன்றாக விளக்கும் வேளையில் அதற்குத் தேவையான ஆதாரங்கள், ஒன்றை விளக்கும் பொழுது அதற்கான நம்பத்தகுந்த தரவுகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்

      2. விளக்கும் ஒவ்வொன்றும் அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்ப வடிவமைப்பும், எழுத்துக்களின் செரிவும், பக்கங்களின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும்

    • நிரூபணம்
      1. அனைத்தையும் எழுதி முடித்த பிறகு, சீரமைப்பு, எழுத்துக்களின் வடிவம், பக்கங்களின் வடிவமைப்பு, பக்க எண்கள் முதலிய அனைத்து படிக்க இனிதாக இருக்க வைக்கும் காரணிகளை சரிபார்க்க வேண்டும்

      2. ஆய்வுக்கட்டுரையை ஒரு முறைக்கு மேல் தீர வாசித்து, சரி பார்க்க வேண்டும். தேவைபட்டால் வேறு இருவரைக் கூட படித்துப் பார்க்கச் சொல்லலாம்

      3. அனைத்து உழைப்பும், முயற்சியையும் இந்த ஆய்வுக்கட்டுரைக்காகவே என்பதை மனதில் கொண்டு, அதற்கேற்ப நாம் தயார் செய்திருக்க வேண்டும்

      4. முக்கியமாக படிப்பவருக்கு எளிதாக புரியும் வண்ணம் அழகாக இயற்றியிருக்க வேண்டும்

      5. அந்தக் கல்வி ஆய்வுக்கட்டுரைக்காக நாம் எவ்வளவு முயற்சி செய்து உழைத்திருக்கிறோம் என்பது படிக்கும் அறிஞர்களுக்கும், நம் ஆய்வுக்கட்டுரையை அங்கீகரிப்பவருக்கும் தெரியும் அளவிற்கு திறம்பட எழுத வேண்டும்

புதுக்கவிதை தமிழ் இலக்கியம்


புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.

உலகில் கவிதைகளை விரும்பாத ஆட்களே இல்லை. இவ்வகையில் கவிதைகளின் ஒரு வடிவமே புதுக்கவிதைகளாகும். மரபுக்கவிதை மௌனமாய் மார்தட்டிக் கொள்ள புதுக்கவிதைகள் புரியும் விதமாய் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

நேசம்⸴ காதல்⸴ கோபம்⸴ மகிழ்ச்சி⸴ அன்பு⸴ பாசம்⸴ துக்கம்⸴ ஏக்கம்⸴ எதிர்பார்ப்பு⸴ காத்திருப்பு என எல்லாவற்றையும் சுவைபட புதுக்கவிதைகள் அலங்கரித்து வருகின்றன.

புரியும் வகையிலும்⸴ தெளிவாகவும் புதுக்கவிதைகள் வரையப்படுகின்றன. மனித மனங்கள் நிரப்பப்படுகின்றன. இத்தகைய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


அமைப்பு

மரபுக்கவிதை போன்று சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை கொண்டிராத ஒன்றாக புதுக்கவிதை காணப்படுகின்றது. புதுக்கவிதைகளில் காணும் காட்சியினை அலங்கார வார்த்தைகளின்றி, உள்ளதை உள்ளபடியே எளிய தமிழ்ச் சொற்கள் கொண்டே எழுதப்படும் கவிதை வடிவம்.

  • அடிவரையறை (வரி எண்ணிக்கை) இத்தனை அடிகள்தான் எழுதப்பட வேண்டும் என்ற வரையறை இல்லை.

  • அடியமைப்பு (வரியமைப்பு): ஒவ்வொரு அடியிலும் குறிப்பிட்ட சீர்கள் இருக்க வேண்டுமென்ற வரையறை இல்லை.

  • சொற்சுருக்கம்: சொற்சுருக்கம் இருக்க வேண்டியது புதுக்கவிதைக்கான முக்கிய அம்சம்.

  • ஒலிநயம்: பேச்சுவழக்குச் சொற்களிடையே ஒலிநயம் காணப்படுவது பொதுவானது.

  • சொல்லாட்சி: சொற்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதும் வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்குச் சார்ந்த சொற்களுக்கும் பாவிக்கப்படுகிறது.

  • தொடை நயம்: எதுகை, மோனை, இயைபு என்னும் தொடை நயங்களெல்லாம் கட்டாயம் என்ற நிலையில்லை.

  • யாப்புச் சாயல் மற்றும் நாட்டுப்புறச் சாயல்: அடிவரையறை செய்து எழுதும்போது மரபுக்கவிதை போன்று இது தோற்றமளிக்கும்.

  • வசன நடை மற்றும் உரையாடல் பாங்கு: வசன நடையும் உரையாடல் பாங்கும் சிறப்பாக எளிய முறையில் பாவிக்கப்படும்.

  • காட்சி அமைப்பு: ஒரு கருப்பொருளை காட்சியாகக் கொண்டு நம்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் எளிய வடிவம் புதுக்கவிதை


தோற்றம்

1910ஆம் ஆண்டில் “வால்ட் விட்மன்” எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய “புல்லின் இதழ்கள்ˮ எனும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் குடியேறிய “எஸ்ரா பவுண்ட்” ஒரு சிறந்த புதுமையான புதுக்கவிதையைத் தந்தார்.
கி.பி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறக்கலானது. பாரதியால் எழுதப்பட்ட வசனக் கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதைக்கு முன்னோடியாக அமைந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சியும் அதனோடு கூடிய தேவையும் புதுக்கவிதைக்கு வித்திட்டது.



புதுக்கவிதைக்கான இலக்கணம்

தொல்காப்பியர் புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை “விருந்துˮ எனப் பெயரிட்டு சிறப்பித்து வரவேற்றார். இதேபோல் நன்னூலார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேˮ என்றார்.
புதுக்கவிதை மரபுக் கவிதைகள் போலல்ல. இவை இலக்கணச் செங்கோல்⸴ யாப்புச் சிம்மாசனம்⸴ எதுகை பல்லக்கு⸴ தனிமொழி சேனை⸴ பண்டித பவனி இவை எதுவும் இல்லாது தம்மைத் தாமே ஆளும் சிறப்பு பெற்ற கவிதைகள் புதுக்கவிதைகளாகும்.



புதுக்கவிதையின் வளர்ச்சி காலம்

புதுக்கவிதையானது மூன்று காலகட்டங்களில் வளர்ச்சியடைந்தது. மணிக்கொடி காலம்⸴ எழுத்துக் காலம்⸴ வானம்பாடிக் காலம் என்பனவே அவையாகும்.
மணிக்கொடி காலத்தில் மணிக்கொடி இதழ் மட்டுமன்றி வேறு பல இதழ்களும் புதுக்கவிதைகளை வெளியிட்டுள்ளன. ஜெயபாரதி⸴ சூறாவளி⸴ மோகினி போன்ற இதழ்களைக் கூறலாம். இந்நூல்கள் மணிக்கொடி முதலில் தோன்றியதால் இதனை மணிக்கொடி காலம் எனப்பட்டது.
எழுத்து காலத்தில் எழுத்து⸴ சரஸ்வதி⸴ இலக்கியவட்டம்⸴ தாமரை⸴ கசடதபற போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வளர்ந்தன. சிட்னி⸴ வல்லிக்கண்ணன்⸴ மயன் ஆகியோர் இக்காலத்திற்குச் சிறப்புச் சேர்த்தவர்களாவர்.
வானம்பாடி காலத்தில் வானம்பாடி⸴ தீபம்⸴ கணையாழி⸴ சதங்கை முதலிய இதழ்கள் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தன. சகங்கை⸴ புவியரசு போன்றவர்களை இக்காலத்து புதுக்கவிஞர்களாக்கியது.



புதுக்கவிதைகளின் சிறப்புக்கள்

புதுக்கவிதைகள் எளிய மொழி நடையிலுள்ளதால் அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்குச் சான்றாக புதுக்கவிதைகள் விளங்குகின்றன.
புதுக்கவிதை வழிப் பல கவிதை முன்னோடிகள் வளர்ச்சி அடைந்தனர். சுருக்கம் கொண்டதனால் எழுதுவது இலகுவாகும். பேச்சுவழக்குச் சொற்கள்⸴ ஒலிநயம் காணப்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வடமொழி⸴ ஆங்கிலம்⸴ பேச்சு வழக்கு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கருப்பொருளைக் காட்சியாகக் கொண்டு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடியதாய் புதுக்கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

சிறுகதை இலக்கியம்


சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். இது பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
சிறுகதைகள் மிகவும் சிறுகதைகள், அதில் ஒரு தலைப்பு உரையாற்றப்படுகிறது. அவை பொதுவாக பொருத்தமான விஷயங்களில் வரம்புகள் இல்லை மற்றும் கற்பனைக் கதைகள் முதல் பரிந்துரைக்கும் அல்லது அசாதாரண இயல்புடைய நூல்கள் வரை இருக்கும். மைக்ரோ-கதைகள் எப்போதுமே இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகள் அல்லது ஈர்க்கக்கூடிய யதார்த்தத்தின் விளக்கங்களை நோக்கிச் செல்கின்றன.

எவ்வாறாயினும், இந்த இலக்கிய துணை வகைக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை கூறுகள் அசல் மற்றும் ஒத்திசைவு. இந்த வழியில், சிறுகதை வாசகரை ஆச்சரியப்படுத்தும் அல்லது வசீகரிக்கும் திறனைக் கொண்டிருக்கும் (மேலும் இது "எளிதில் மறக்கக்கூடிய" கதை அல்ல). அதாவது, முதல் முதல் கடைசி வாக்கியம் வரை தனது பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன் ஆசிரியருக்கு இருக்க வேண்டும்.

முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவம். பெரும்பாலும் நடப்பியல் நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப் புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.

தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள்.[1] உண்மையில் பாரதியின் முதல் சிறுகதை 1905ல் தொடங்கி - அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சக்கரவர்த்தினி என்ற இதழில்- பகுதிகளாக வெளியிடப்பட்ட 'துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின் சரித்திரம்' என்பதாகும். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை என்பது பலரால் சொல்லப்பட்டுவரும் விவாதத்திற்குரிய கருத்தாகும். சிறுகதை என்ற புதிய இலக்கியவகை தமிழில் அறிமுகமானபோது - சிறுகதை என்பது என்ன?என்ற முடிவான, ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து ஏதும் உருப்பெற்று நிலைபெறாத அக்காலகட்டத்தில் (1900-1920), பாரதியார், மாதவையா,வ.வே.சு. ஐயர் ஆகியோர் தத்தமக்கு வாகான வகையாகச் சோதனை முயற்சிகளாக எழுதினர். வ.வே.சு ஐயரே பிற்காலத்தில் நெடிய சரித்திரக் கதைகள் எழுதக் 'கைப்பழக்கமாகவே ' சிறுகதைகள் எழுதி வருவதாகத் தன் நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைப்படுத்தியுள்ளார்.

தாம் சுயமாகச் சிறுகதைகள் எழுதும் முன்னரே தாகூரின் வங்கமொழிச் சிறுகதைகளை மூலமொழியறிந்திருந்த பாரதியார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளாரென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் பார்த்தால், பாரதியார் தமது சொந்தச் சிறுகதைகளைத் தாம் விரும்பிய-'சொல்புதிது, பொருள் புதிது' எனும் முற்போக்கு எண்ணப்படி வார்த்தளித்துள்ளாரென்ற ஏற்பே நியாயமானதாக இருக்கும்.

தற்காலத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் மூல மூவர்களான பாரதியார், மாதவையா, வ.வே.சு. ஐயர் ஆகிய மூவருமே 1925வாக்கில் இயற்கையடைந்துவிட்ட பின்னர் ஏற்பட்டிருந்த வெற்றிடக்காலம் நீண்டு தொடர்ந்து விடாமல் தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று
சொல்லப்படுகிறார்கள்.

தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரசாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி [ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதைப் படைப்பிலக்கியம்

எந்த வகைப் படைப்பிலக்கியத்திற்கும், ஆர்வத்திற்கும் மேலாக மூன்று அடிப்படைகள் தேவைப்படுகின்றன. பின்வரும் தன்மையிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் தோன்றியுள்ளன.

  • வாழ்க்கை அனுபவம்
  • வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம்
  • கற்பனைத் திறன்

சிறுகதை, உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கு உரியது. 20ஆம் நூற்றாண்டின் புதுமைகளாக இவை உருவாகியுள்ளன. நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கற்பனைகள் சிறுகதைகளாக மலர்கின்றன. இக்காலப் படைப்பிலக்கியங்களுள் சிறந்ததாகச் சிறுகதை இலக்கியம் கருதப்படுகிறது. உயிராக உணர்ச்சியும், உருவமாக மொழியும் அமைந்து சிறுகதை வாழ்வு பெற்றுள்ளது. மக்களை இன்புறுத்தும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும் சிறுகதைகள் தோன்றியுள்ளன.

சிறுகதைப் படைப்பிலக்கியங்களின் மூலம் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. மதங்கள் வளர்ந்திருக்கின்றன. மனிதப் பண்புகள் மெருகேறி இருக்கின்றன.
இந்தியாவில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி, அறிவியல் புரட்சி, தேசிய எழுச்சி ஆகியன உரைநடை இலக்கியத்தை வளர்ப்பதற்கான காரணிகள் ஆயின. இந்திய மொழிகளிலும் மரபுக் கவிதைகள் படிப்படியாய்க் குறைந்து, புதிய கவிதைகள் தோன்றின. அவ்வாறே கதைகளிலும் மரபுநிலை மாறி, புதுமை இடம்பெறத் தொடங்கியது. இதன் விளைவு சிறுகதை இலக்கியம் சிறந்த இலக்கிய வடிவமாய் மலர ஆரம்பித்தது. சிறுகதை ஐரோப்பியர் வரவால் தமிழுக்குக் கிடைத்தது என்பது அறியத்தக்கது.

சிறுகதை, மக்களின் கதைகேட்கும் ஆர்வத்தால் பொழுது போக்கிற்கு இடமளிக்கும் அளவில் தோன்றியதாகும். இன்று, இச்சிறுகதைகள் சமுதாயத்தில் பலரும் விரும்பிப் படித்துப் பயன்கொள்ளத்தக்க அளவில் எளிய இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. சிறுகதைகள் வாழ்க்கைக்குத் திருப்பங்களாக அமைகின்றன. சிறந்த சிறுகதைகள் போதனை செய்து ஒழுக்கத்தினை உயர்த்துவதாகவும் அமைகின்றன.

கட்டுரை இலக்கியம்


ஒரு பொருளைப் பற்றிய கருத்துகளைக் கட்டி சிறப்பாக உரைப்பது கட்டுரை இலக்கியம் ஆகும். இது மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் எழுந்தது தான் இந்த கட்டுரை இலக்கியம். இது உரைநடையில் அமைவது. இதன் வகைகள் இப்போது பார்க்கலாம்.

  • வாழ்க்கை வரலாறு / சுயசரிதை
  • ஆராய்ச்சி நூல்கள்
  • விளக்க நூல்கள்
  • பயண இலக்கிய நூல்கள்

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு போல் அல்லாது, ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் உதாரணமாக ஒருவருடைய நெருக்கமான வாழ்க்கை அனுபவங்களையும், அவருடைய ஆளுமையைப் பற்றி விளக்குவதாகவும் உள்ளது.
சுயசரிதை என்பது கதையல்ல. ஆனால் ஒரு கதையில் ஒருவருடைய வாழ்க்கைச் சாிதத்தைச் சித்தாிக்கலாம். இந்த தனிநடையானது இலக்கியம் முதல் சினிமா வரையிலான பல்வேறு ஊடகங்களிலிருந்து உருவானது. அதிகாரம் பெற்ற வாழ்க்கை வரலாறு என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். சுய சாிதை என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானோ அல்லது உதவியாளரை வைத்தோ எழுதுவது.
முதலில் ஒருவருடைய வரலாற்றை எழுதும் முறை வரலாற்றின் ஒரு துணைப் பகுதியாகவே கருதப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரைப் பற்றி எழுதக் கூடியதாகவே இருந்தது. சுதந்திர வகை வாழ்க்கை வரலாறு எழுதுதல் முறையானது ஆனால் பொது வரலாறு எழுதுதல் முறையிலிருந்து வேறுபட்டது. இந்த முறை 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தற்போதைய நிலையை இது 20-ஆம் நூற்றாண்டில்தான் அடைந்தது.
கார்னீலியஸ் நீபோஸ் என்பவர் முந்தைய பயோகிராஃபி எழுத்தாளர்களில் ஒருவராவார். அவர் கி.மு. 44-ல் எக்லென்ஸியம் கிம்பரேடாரம் விட்டேயி (லைவ்ஸ் ஆப் அவுட்ஸ்டேன்டிங் ஜென்ரல்ஸ்) என்ற நூலை வெளியிட்டார். மிக நீளமான வாழ்க்கை வரலாறான "பாரலல் லைவ்ஸ்" புளுடார்ச் என்பவரால் கிரேக்க மொழியில் எழுதி கி.பி.80-ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற கிரேக்கர்களைப் புகழ்பெற்ற ரோமானியர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு பேச்சாளர் டீமாஸ்தீனன் மற்றும் சீசரோ அல்லது தி கிரேட் அலெக்ஸாண்டர் மற்றும் கீலியஸ் சீசர் மற்றுமொரு பழமையான வாழ்க்கை வரலாறு "டீ விட்டா சீசரம்" சியுடோனியசால் கி.பி. 121-ல் அரசர் காட்ரியன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
முந்தைய இடைக்காலத்தில் (கி.பி.400 - 1450) ஐரோப்பாவில் நாகாிகத்தைப் பற்றிய விழிப்புணர்வு குறைந்தது. அந்தச் சமயத்தில் ஒரே ஓர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத் துறவிகள், மதகுருமார்கள் இக்காலத்தை வாழ்க்கை வரலாறு எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடைய படைப்புகள் மக்களிடையே அகத்தூண்டலை உண்டுபண்ணுவதாகவும் மதமாற்றத்திற்கான ஊடகமாகவும் திகழ்ந்தன. இக்காலகட்டத்தின் வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கியமான உதாரணமாக உள்ளது. எயின்கார்ட் எழுதிய "சார்ல்மாங்கி்ன் வாழ்க்கை" இடைக்கால இசுலாமிய நாகரீகம் (கி.பி.750 - 1258) இக்காலத்தில் முகமது மற்றும் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. மற்ற படைப்புகளைக் காட்டிலும் இவ்வகை வாழ்க்கை வரலாறுகள் அதிக சமூகச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முந்தைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கையில் கவனம் செலுத்தின.
அமொிக்க பயோகிராஃபி எழுதும் முறை ஆங்கில முறையை ஒத்திருக்கிறது. இந்த முறை தாமஸ் கார்லியின் கருத்தான வாழ்க்கை வரலாறு என்பது வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்ற கருத்தை ஒருங்கினைத்து இருக்கிறது. சமுதாயத்தைப் புாிந்துகொள்ள சிறந்த மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு மிக அவசியமானது என்று கார்லி வலியுறுத்தினார்.


ஆராய்ச்சி நூல்கள்

இலக்கியங்களின் கருத்துகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், காலங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்றவற்றை வெளியிடும் முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்றனவும் ஆராய்ச்சி நூல்களாகும். வையாபுரிப் பிள்ளை அவர்களின் காவிய காலம், இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர்மணிகள் போன்றன இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும்.
இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆண்டுதோறும் கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக்கம் செய்து வெளியிடுகின்றது. இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இன்ன பிற நிறுவனங்களின் கருத்தரங்குகளும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குகின்றன.


விளக்க நூல்கள்

செய்யுள் நூல்களுக்கு விளக்கம் அளித்தல், ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் அணுகுதல், பல கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உரைத்தல் ஆகியன இவ்வகை நூல்களின் இயல்பாகும்.
திரு.வி.கலியாணசுந்தரனாரின் சைவத்தின் சாரம், முருகன் அல்லது அழகு, திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இராமலிங்க சுவாமிகளின் திருவுள்ளம் போன்றன இவ்வகை நூல்களாகும்.


பயண இலக்கிய நூல்கள்

பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற்சிகள் படிப்படியாக செம்மைபெற்று பயண இலக்கியமாக வடிவம் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் எந்த கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தது என்பது அறுதியிட்டுக் கூற முடியாத செய்தியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன் எழுதுதல் இவ்வகை நூல்களின் இயல்பாகும். கற்போர், அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்வையும் அனுபவத்தையும் பொது அறிவையும் பெறுதல் இதன் பயனாகும்.
பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்கு புதியது அன்று. பயண இலக்கியம் என்ற பெயரில்லை ஆனால் வேறு பெயர்களில், தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவற்றை இவ்வகைப்பாட்டில் அடக்கலாம். பயணம், சுற்றுலா, செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்னும் பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும். தமிழ் மொழி அகராதி, செலவு என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடிவு, வழி என்று பொருள் தருகிறது.
பயண இலக்கியத்தின் நோக்கம் என்வென்றால் நிலப்படங்களும் நிலப்பட வரைவியலும் இல்லாத அக்காலத்தில் பயணிகள் பாதை கண்டறிவதும் அதன் வழி செல்வதும் அவர்களுக்கு பெரும் இடையூறு தரும் செயல்களாகவே அமைந்தன. எனினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே அவர்கள் சென்று வந்து, அந்த அறிவை தமக்குப் பின்பு வருவோர் பயன்படுமாறு பயண இலக்கியம் படைத்தனர்.
19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நூல்களை வகைப்படுத்தி பட்டியலிடும் முறைக்கு இவரே தந்தை எனலாம். பயண நூல் பட்டியலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பயண இலக்கியம் பற்றிய முழுமையான சித்திரிப்பை நம்மால் பெற இயலும்.
19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி இந்திய இலக்கிய உலகிலும் புதிய திசைகளைத் தேடிய நேரம். இந்திய விடுதலை இயக்கம் தமிழ் நாட்டில் காந்திய வழியில் போராடிய நேரம். ஜேம்ஸ் ஆகுஸ்டுஸ் ஹிக்கி வங்காளத்தில் புதிய அச்சு இயந்திரத்தை இந்தியருக்கு அறிமுகப்படுத்தினார். நவீன அச்சு இயந்திரத்தின் வரவால் புத்தகங்கள் கிடைப்பது எளிதானது. புத்தகங்களின் வரவால் மேலை, கீழை நாட்டு இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. படித்த நடுதர வர்கம் என்று சமூகத்தில் ஒரு புதிய வகை மக்கள் தோன்றினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய திசையை கண்டறிவது அவசியம் ஆனது. புதிய இலக்கிய வகை அறிமுகம் அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது.


புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்:
  • உலகம் சுற்றும் தமிழன் - அ. க. செட்டியார்
  • பிரயாண நினைவுகள் - அ. க. செட்டியார்
  • கனடா முதல் கரிபியன் வரை - அ. க. செட்டியார்
  • மகாத்துமாவின் அடிச்சுவட்டில் - அ. க. செட்டியார்
  • எனது பிரயாண நினைவுகள் - சோமலே
  • பிரிட்டனில்... - நெ. து. சுந்தரவடிவேலு
  • புதிய ஜெர்மனியில் - நெ. து. சுந்தரவடிவேலு
  • சோவியத் நாட்டில் - நெ. து. சுந்தரவடிவேலு
  • சோவியத் மக்களோடு - நெ. து. சுந்தரவடிவேலு
  • உலகத் தமிழ் - நெ. து. சுந்தரவடிவேலு
  • இதயம் பேசுகிறது (தொகுதிகள்) - மணியன்
  • அலைகடலுக்கு அப்பால் - சாரதா நம்பியாரூரான்
  • நவகாளி யாத்திரை - சாவி
  • வடுகபட்டி முதல் வால்கா வரை - வைரமுத்து
  • கொய்ரோவில் - வா. மு. சேதுராமன்
  • நூலக நாட்டில் நூற்றியிருபது நாட்கள் - அ. திருமலைமுத்துசுவாமி
  • வேங்கடம் முதல் குமரி வரை - 4 பாகங்கள் - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
  • வேங்கடத்திற்கு அப்பால்.. - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
  • தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்

புதினம்

புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு. நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கிய வடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கிய வகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது

மேல்நாட்டவர் தொடர்பால் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வகைதான் புதினமாகும். ஒருவருடைய வாழ்வைக் கூறக்கூடியது தான் நாவல் ஆகும். புதினங்களை நாவல்கள் என்றும் நவீனம் என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் நாவல்கள் என்றே அழைத்தனர். பிற்காலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து புதினம் என அழைத்தனர்.

பொதுமக்கள் படிக்கும் இலக்கிய வகையாக நாவல் இருக்க வேண்டும். இதுவே ஆரம்ப நாவலின் கருத்தாகும். நாவல் என்ற இலக்கியமானது முதன்முதலில் இத்தாலியில் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.

வரலாறு:

நாவல் என்னும் சொல் புதுமை என்ற பொருளைத் தரவல்லது. இச்சொல் 'Novela' என்னும் இத்தாலியச் மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சியுற்று நிலைபெற்று வந்துள்ளது. கொலம்பியக் கலைக்களஞ்சிய நூல் (The Colombia Encyclopedia), இதற்கு 'உரைநடையால் அமைந்த நெடிய கதை' என விளக்கம் அளிக்கிறது. வெப்ஸ்டரின் அகரமுதலியானது (Webster's New 20th Century Dictionary), நாவல் என்பதற்கு, மனித உணர்ச்சிகள், எண்ணங்கள் அவர்தம் செயல்கள் ஆகியவற்றை விளக்கி எடுத்துரைக்கின்ற, உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று விரிவாக விளக்கமளித்துள்ளது. இத்தாலி நாட்டில் தோன்றிய நாவல் இலக்கியம் தொடக்கத்தில் காதல் நிகழ்வுகளைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தது. பின், இயற்கையாக நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு சித்திரிப்பதால் புனைகதை என்னும் பொருளில் கையாளப்பட்டது. தமிழில் நாவலை புதினம் என்று வழங்கிவரும் போக்கு நிலவுகிறது

1) பிரதாப முதலியார் சரித்திரம்-1876-மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம்-1896-இராஜமய்யர்
3) பத்மாவதி சரித்திரம்-1898-அ.மாதவையா

இம்மூன்று புதினங்களும் சமூக நோக்கு, பெண்ணின் சிறப்புகள், நகைச்சுவை நடை, புதினத்தைச் சரித்திரம் எனக் கொள்ளல் ஆகிய பொதுப்பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. இவற்றுள் புதின உத்திகள் கொண்டு விளங்குவது கமலாம்பாள் சரித்திரம் ஆகும். தொடர்ந்து, குருசாமி சர்மாவின் பிரேமகலாவத்யம் பெண்கல்வி மறுப்பையும், நடேச சாஸ்திரியின் தீனதயாளு, திக்கற்ற இரு குழந்தைகள் ஆகியவை பால்யவிவாகத்தையும், அ.மாதவையாவின் விஜய மார்த்தாண்டன் மறவர் மற்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம் குறித்தும் முத்துமீனாட்சி(1903) கைம்மைக் கொடுமையையும், வில்லியம் பொன்னுசாமியின் கமலாக்ஷி மற்றும் சிவகுமரன் சமுதாயப் பார்வையும் கொண்ட புதினங்களாக இருந்து வருகின்றன.

மேலும் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் தரைசாமி ஐயங்கார் ஆகியோர் மேனாட்டு நாவல்களைத் தழுவித் தமிழில் புதினங்கள் பல எழுதியுள்ளனர்.

புதினத்தின் வகைகள்

கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது.



  • சமுதாயப் புதினங்கள்
  • வரலாற்றுப் புதினங்கள்
  • வட்டார புதினங்கள்
  • மொழிபெயர்ப்புப் புதினங்கள்
  • அரசியல் புதினங்கள்
  • தழுவல் புதினங்கள்
  • உளவியல் புதினங்கள்
  • நனவோடை புதினங்கள்

துப்பறியும் புதினங்கள்(1910)

ஆங்கில மொழிப் புலமை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தைத் தழுவி பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்தனர். அவர்களுள் சிலர் பின்வருமாறு:

  • ஆரணி குப்புசாமி முதலியார்(1867-1925): ஆங்கிலத்தில் வெளிவந்த பல புதினங்களைத் தழுவி இவர், தமிழ்மொழிச் சூழலுக்கேற்ப சுமார் எழுபத்தைந்து துப்பறியும் புதினங்களைப் படைத்தார். அவற்றுள் இரத்தினபுரி ரகசியம்(ஒன்பது பாகங்கள்), தபால் கொள்ளைக்காரன், மஞ்சள் அறையின் மர்மம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

  • வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்(1880-1942): இவர் மேனகா, கும்பகோணம் வக்கீல், பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் முதலான புதினங்களை எழுதியுள்ளார்.

  • ஜே.ஆர்.ரங்கராஜூ(1875-1956): துப்பறியும் கோவிந்தன், சந்திரகாந்தா, இராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்ற புதினங்கள் இவருடையதாகும்.

  • வை.மு.கோதைநாயகி அம்மாள்(1901-1960): இவர் கிழக்கு வெளுத்தது, புனித பவனம், தைரிய லட்சுமி முதலிய புதினங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மொத்த புதினங்களின் எண்ணிக்கை நூற்றுப் பதினைந்து ஆகும்.

மேலும்,தேவன், தமிழ்வாணன், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் முதலானோர் பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்துள்ளனர்.



சமுதாயப் புதினங்கள்

சமுதாய வாழ்வியல் சூழலையும், சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் புதினங்கள் சமுதாயப் புதினங்களாகும்.

  • கே.எஸ்.வெங்கடரமணி: இவரால் எழுதப்பட்ட முருகன் ஓர் உழவன்(1928), கந்தன் ஒரு தேசபக்தன்(1938) ஆகிய புதினங்கள் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் தேசப்பற்றையும் அடிப்படைகளாகக் கொண்டிருந்தன.

  • 'கல்கி'ரா.கிருஷ்ணமூர்த்தி(1899-1954): இவர் எழுதிய தியாகபூமி, கள்வனின் காதலி, மகுடபதி, அலை ஒசை முதலான புதினங்கள் சாதிக் கொடுமை, விதவைக் கொடுமை, பொருந்தாமணம், விடுதலை வேட்கை ஆகியவற்றை எடுத்துரைத்தன.

  • நாரணதுரைக் கண்ணன்: 1942-இல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு தியாகத் தழும்பு என்னும் புதினத்தை இவர் உருவாக்கினார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகிய புதினங்களும் இவருடையதாகும்.

  • ர.சு.நல்லபெருமாள்: இவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் புதினம் நாட்டு விடுதலையில் பெண்களின் ஈடுபாடு குறித்து பேசப்பட்டிருந்தது.

  • ராஜம் கிருஷ்ணன்:இவர் எழுதிய வளைக்கரம் கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரித்தது. குறிஞ்சித்தேன், கூட்டுக் குஞ்சுகள், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், அலைவாய்க் கரையில் முதலான புதினங்களையும் இவர் படைத்துள்ளார்.

  • அகிலன்: பெண், எங்கே போகிறோம்?, நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், சித்திரப்பாவை முதலான சமுதாய புதினங்களை இவர் எழுதியிருக்கிறார்.

இதுதவிர, வ.ரா.வின் சுந்தரி, கோதைத்தீவு, பி.எஸ்.ராமையாவின் பிரேம ஹாரம், ஆர்வியின் அணையா விளக்கு, மு.வ.வின் நெஞ்சில் ஒரு முள், அல்லி, அகல்விளக்கு, கரித்துண்டு, விந்தனின் பாலும் பாவையும், டி.கே.சீனிவாசனின் ஆடும் மாடும், சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், க.நா.சு.வின் பொய்த்தேவு, எம்.வி.வெங்கடராமின் காதுகள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ரகுநாதனின் பஞ்சும் பசியும், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு, சமுதாய வீதி, டி.செல்வராஜின் மலரும் சருகும், நீல.பத்மநாபனின் தலைமுறைகள், த.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், பாரிஸுக்குப் போ, சி.என்.அண்ணாதுரையின் பார்வதி பி.ஏ., ரங்கோன் ராதா, ஜெகசிற்பியனின் கிளிஞ்சல் கோபுரம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம், அசோகமித்திரனின் தண்ணீர், அப்பாவின் சிநேகிதர், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி, எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின் புனிதம் தேடும் புதினம் உமா சந்திரனின் முள்ளும் மலரும், சா.கந்தசாமியின் விசாரணை கமிஷன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், ஜெயமோகனின் ரப்பர், அன்வர் பாலசிங்கத்தின் செந்நீர் முதலான சமுதாய புதினங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.




வரலாற்றுப் புதினங்கள்

பண்டைத் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் புதினங்கள் எழுதப்படுகின்றன. அந்த வகையில் கல்கி, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகியவற்றையும், அகிலன், மணிபல்லவம், கயல்விழி, வேங்கையின் மைந்தன், வெற்றித் திருநகர் ஆகிய புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யனின் யவன ராணி, கடல் புறா, ராஜபேரிகை போன்றவையும் கோவி. மணிசேகரனின் அக்கினிக் கோவம், பீலிவளை, செம்பியன் செல்வி, அஜாத சத்ரு முதலானவையும் குறிப்பிடத்தகுந்தவை. இதுபோல், மு.மேத்தாவின் சோழநிலா, கலைஞர் கருணாநிதியின் ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், பூவண்ணனின் காந்தளூர்ச் சாலை, விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி, ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை, ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை,நந்திவர்மன் காதலி,திருச்சிற்றம்பலம் ஆகியவையும் அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி முதலானவை வரலாற்றுப் புதினங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.




வட்டார புதினங்கள்

வட்டார புதினம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் களமாகக்கொண்டு,அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவதாகும்.வட்டார புதினம் எழுதும் வழக்கை வேங்கடரமணி தோற்றுவித்தார். சில வட்டார புதினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவையாவன: மண்ணாசை-சங்கர்ராம் நாகம்மாள்,அறுவடை-ஆர்.சண்முக சுந்தரம் தங்கச் சம்பா-பூவை.எஸ்.ஆறுமுகம் மானாவாரி மனிதர்கள்-சூரியகாந்தன் ஏறுவெயில்-பெருமாள் முருகன் செந்நெல்-சோலை சுந்தர பெருமாள் தேரி மணல்-முகிலை இராசபாண்டியன் சாயத்திரை-சுப்ரபாரதிமணியன்


மொழிபெயர்ப்புப் புதினங்கள்

தமிழில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்,லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும்,விக்டர் ஹியூகோவின் ஏழைபடும் பாடு,தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன்,தோட்டியின் மகன்,காண்டேகர் மற்றும் தாகூர் புதினங்கள் பல மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.இப்பணியை கா.ஶ்ரீ.ஶ்ரீ.,த.நா.சேனாபதி,சிற்பி பாலசுப்பிரமணியம்,தமிழ்நாடன்,சுந்தர ராமசாமி முதலானோர் ஈடுபட்டனர்.


அரசியல் புதினங்கள்

நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளை மையமாக வைத்து விருப்பு வெறுப்பில்லாமல் அரசியல் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நாரண.துரைக்கண்ணனின் சீமான் சுயநலம்,நா.பார்த்தசாரதியின் நெஞ்சக்கனல்,வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்,பெருமாள்முருகனின் மாதொருபாகன் போன்றவை அரசியல் புதினங்களுக்கு உதாரணங்களாகும்.


தழுவல் புதினங்கள்

அயல்நாட்டுப் புதினக் கதையைத் தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்பத் தழுவி எழுதுவதாகும்.மறைமலையடிகளின் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி,எஸ்.எஸ்.மாரிசாமியின் அநாதை ஆனந்தன்போன்ற புதினங்கள் தழுவி எழுதப்பட்ட புதினங்கள் ஆகும்.


உளவியல் புதினங்கள்

இருபாலரின் உளவியல் சிக்கல்கள் குறித்து இவை எடுத்துரைக்கின்றன.காட்டாக, தி.ஜானகிராமனின் மோக முள், அம்மா வந்தாள், கோவி.மணிசேகரனின் தென்னங்கீற்று, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், முதலானவற்றைக் கூறவியலும்.


நனவோடை புதினங்கள்

நனவோடை என்பது ஓர் உத்தியாகும். நனவோட்டத்தின் வழியே கதை கூறுதலாகும்.அசுர கணம்(க.நா.சு), ஜீவனாம்சம் (சி.சு.செல்லப்பா), அபிதா, புத்ர (லா.ச.ரா.) முதலியன நனவோடை புதினங்கள் ஆகும்.



புதின அமைப்பு

கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது. அவையாவன,

  • கதைக்களம்.
  • கதைக்கரு.
  • கருப்பொருள்.
  • கதையும் கதைப் பின்னலும்.